November 28, 2010

வெற்றி டைம்ஸ் 29/11/2010


ஜெயலலிதா Vs ஸ்டாலின்..?
ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் அடுத்த முதல்வர் யார் என்று ஒரு சர்வே பற்றி கேபிள் சங்கர் எழுதியிருக்கிறார்.கலைஞரா?ஜெயலலிதாவா? என்ற சர்வே மாற்றாக ஸ்டாலினா? ஜெயலலிதாவா? என்ற கேள்விக்கு வித்யசமான ரிசல்ட் கிடைக்கும் என்று சொல்கிறார்.இதை நானும் வழிமொழிகிறேன்.ஸ்டாலின் துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றுவதாகவே தெரிகிறது.தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக "முதல்வர் வேட்பாளர்" ஸ்டாலின் என்று களத்தில் இறக்கிவிட்டால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது..!
----------------------------------------------------------------------------------------
சமூக கொடுமை
செப்டிக் டேங்க்குகளை சுத்தம் செய்யவோ, இதற்கான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்யும் பணிகளிலோ, எக்காரணம் கொண்டும் நேரடியாக துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்த பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தடை விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மனித கழிவுகளை மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது சமூக நோக்கில் மிகவும் கொடுமையான விசயம்.இந்த உத்தரவுக்கு பின்னால் நாராயணன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கு கிடைத்த வெற்றி இது..!சமூக அக்கறைக் கொண்ட தனி மனிதன் நாராயணணுக்கு நன்றி..!!!
-------------------------------------------------------------------------------------
பேஸ்புக் VS கூகுள்?
முகபுத்தக நிறுவனம் அதாங்க பேஸ்புக் தற்போது, இ-மெயில் சேவையிலும் நுழைந்துள்ளது என்றும்.பேஸ்புக் வலைதளத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இது உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. "ஸ்பாம்' மெயில்கள் இதில் வடிகட்டி அனுப்பப்படுவது இதில் சிறப்பம்சமாக கூறப்படுகிறது.இது கூகுள் மெயிலுக்கு போட்டியாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது.என்னை பொருத்தவரை கூகுளை அவ்வளவு எளிதில் யாரலும் மிஞ்ச முடியாது..!!!விட்டா பட்டி தொட்டி எல்லாம் சொல்லுவான் கூகுள் பத்தி..!
------------------------------------------------------------------------------------

குடும்ப சண்டை
நடிகர் விஜயகுமார் வீட்டில் குடும்ப பிரச்சனை.மகளால இப்ப சந்தி சிரிக்குது. பழைய பகையை தீர்த்துக்கொள்ளுது ஓரு பேப்பர் குரூப்..!!!இன்னும் என்ன என்ன‌வெல்லாம் வரும் என்று?தினமும் பேப்பர படிக்குது ஓரு குரூப்..!!எப்பா அந்த புள்ளைய கூப்புட்டு சமாதான பேசுங்கப்பா..!ஆ..உனான்னா அடுத்தவன் உட்டு கதய ஆரம்பிப்பாளாம் ஆச்சி..!(ஹி..ஹி..."பஞ்ச்"பழமொழி தெரியல அதான்..!)
--------------------------------------------------------------------------------
பெட்ரோல் கொள்ளை
நேற்று கிழக்கு தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வந்துக்கொண்டிருந்தேன்,பள்ளிக்க‌ரனை பாலம் ஏறி,இறங்கிய‌வுடன் எனது டூவீலருக்கு(Apache)பெட்ரோல் போட பங்குக்கு சென்றேன். பணம் கொடுப்பதாகட்டும்,பெட்ரோல் போடும் மீட்டராகட்டும் மற்றும் பெட்ரோல் போடும்போதாகட்டும் கவனமாக கவனித்தேன்.இதுல என்ன செய்திருக்கு? அப்படின்ன நினைக்க வேண்டாம்.சென்னையில பெட்ரோல் பங்குல நடக்குர மேட்டர பத்தி எனது நண்பர் என்னிடம் சொன்ன விசயம் கீழே:
உ.தா: நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்கிறீர்கள் என்றால் பங்குகளில் பணத்தை வசூல் செய்யும் நபர் உங்களிடம் 100 பணத்தை வாங்கிக்கொண்டே பெட்ரோல் போடச் சொல்லுவார் பங்கு பைப் பிடித்துக் கொண்டிருப்பவரிடம்,அவர் நமக்கு முன்னால் "0" ஆக்கிவிடுவார்,ஆனால் அவர் செட் பண்ணியிருப்பது "50ரூ"க்கு செய்திருப்பார்.நம்மிடம்"0" பார்த்துக்கொள்ள சொல்லிக்கொண்டே,நீங்கள் பார்த்தாலும் பார்க்கவிட்டாலும் அவர் பெட்ரோல் போட ஆரம்பிப்பார்.அதே சமயம் பணம் பெற்றுக் கொண்டவர்"நம்மிடம் பேச ஆரம்பிப்பார்"..."வண்டி என்ன மைலேஜ் தருது சார்?" மற்றும் "வண்டி லாங் டிராவல் சுமூத்தா இருக்குதா சார்?"என்ற ரீதியில் இருக்கும்.அதற்குள் "50"க்கு போட்டுவிட்டு மீண்டும் "0" ஆக்கிவிடுவார் பெட்ரோல் போடுபவர்.இப்படி பல தினுசு தினுசா யோசிச்சி அடிக்குராங்களாம்.அதோடயில்ல பேசுற‌வன் வாய பார்த்த நம்ம பணம் இப்படி தான் போகுமாம்"?
-------------------------------------------------------------------------------------
மறுசூழர்ச்சி பற்றிய வீடியோ,இதில் வரும் பாடலும்,இசையும் நன்றாக இருக்கிறது.இசை ஜாக் ஜான்சன்...


படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!

November 26, 2010

எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள் (தொடர் பதிவு)



தம்பி பிலாசபி பிரபாகரன் என்னை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார்.தலைப்பாக "எனக்கு பிடித்த 10 கமல் படங்கள்" கொடுத்திருந்தார்.
நான் சிறுவயதில் இருந்து ரஜினி படங்கள் பார்த்த அளவுக்கு கமல் படங்கள் பார்த்ததில்லை...!!!இருந்தாலும் என்னை கவர்ந்த,பிடித்த‌ கமல் படங்களும் இருக்கின்றன,எண்ணிக்கையில் பத்தை தாண்டும்.நினைவில் உள்ளதை எழுதுகிறேன்,10 படங்களுக்கு மிகாமல் எழுதுகிறேன்.அது போல புது படத்திற்கு விமர்சனத்திற்கும்,பழைய பட விமர்சனத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.ஏறக்குறைய எல்லோராலும் பார்க்கபட்டிருக்கும்...!!!பலராலும் ரசிக்கப் பட்ட விசயத்தை நாம் ரசித்து எழுதாமல் விட்டால் எப்படி இருக்கும்?வரிசை எண்க்கும் பிடித்த படங்களுக்கு சம்பந்தமில்லை.

* சத்யா
* அபூர்வ சகோதரர்கள்
* குணா
* தேவர் மகன்
* மகாநதி
* குருதிப்புனல்
* இந்தியன்
* ஹே ராம்
* அன்பே சிவம்
* விருமாண்டி


1.சத்யா:

சத்யா வேலை தேடிக்கொண்டிருக்கும் பட்டதாரி மற்றும் கோபக்கார‌ இளைஞனாக நடித்திருப்பார்.சமுதாயத்தில் நடக்கும் பல அட்டூழியங்களை கண்டு பொங்கியொழும் கேரக்டராக வாழ்த்திருப்பார்.இதில் அவருடைய ஹேர்ஸ்டையில் பிரமாதமாக இருக்கும்.அமலா ஜோடியாக நடித்திருப்பார்.நண்பன் கொலைக்கு சாட்சி சொல்ல பொதுமக்களை கூப்பிடும் காட்சியில் கூர்மையான வசனங்கள் கையாண்டிருப்பார்கள்.கமலோட முக பாவனை ஏமாற்றத்தோடும்,வெறுப்போடும் வசனம் பேசி நடித்திருப்பார்."வளையோசை கல கலவென" என்ற பிரபல படலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர் பாடிருப்பார்கள்.இது தான் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிற்கு முதல்படம்.

2.அபூர்வ சகோதரர்கள்:


கமல் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.ஏன் மூன்று வேடங்களில் (அப்பா கமலையும் சேர்த்து,அவர் அணிந்து வரும் காவல்துறை உடை நன்றாக இருக்கும்.) நடித்திருப்பார்.புத்திசாலிதனமாக தனது அப்பாவை கொன்றவர்களை பழி வாங்குபவராக குள்ள உருவத்தில் நடித்து அசத்திருப்பார்.உயரமாக வரும் ராஜா கேரக்டரிலும் மின்னிருப்பார்."ராஜா கைய வச்சா" மற்றும் "உன்ன நினைச்சேன்" பாடலும் இளையராஜாவின் இசையில் கேட்க இனிமையாக இருக்கும்.

3.குணா:


கமல் மனநோயாளியாக நடித்திருப்பார்.நண்பன் வற்புறுத்தலால் கோவிலுக்கு கொள்ளையடிக்க செல்லுமிடத்தில்,தன் கனவில் பார்த்த பெண்"அபிராமி"என நினைத்து மலைக்கு கடத்திச்சென்று காதல் மழை பொழிவார்.பல திருப்பங்களுக்கு பிறகு கடைசியில் நாயகியின் ‌சொத்துக்களை அடைய விரும்புப‌வன் அவளைச் சுட்டு வீழ்த்துகின்றான்.தனது காதலி மடிந்து கிடப்பதைப் பார்த்த குணா அவள் உடலைத் தூக்கியவாறு தற்கொலை செய்து கொள்வதாக படம் முடிவடையும்.மனநோயாளியாக மிக பிரமாதமாக நடித்திருப்பார்.பிறகு வந்த கதாநாயகன் மனநோயாளியாக காட்ட படங்களுக்கு முன்னோடி படம் இது.படம் வந்தபோது "அபிராமி,அபிராமி" என்ற வசனம் மிகவும் புகழ் பெற்றது."கண்மணி அன்போடு காதலன்" என்ற வாலி பாடலை கமல் மற்றும் ஜானகி பாடியிருப்பார்கள்.எனக்கு மிகவும் பிடித்த காட்சியாக "பார்த்த விழி" பார்த்தடி" என்ற பாடலும்,அது இடம்பெறும் காட்சிகள் படமாக்கிய விதமும்.இளையராஜாவின் "பிஜிம்" மனதை வருடும் விதமாக இருக்கும்.

4.தேவர் மகன்:


வெளிநாட்டில் படித்து கிராமத்துக்கு காதலியோடு வருவார் கமல்.கிராமத்தில் நடைபெறும் பங்காளி சண்டையை கண்முன் நிறுத்திருப்பார் இயக்குனர்.இதில் கமலும்,சிவாஜியும் கிராமத்து மனிதர்களாக வாழ்த்திருப்பார்கள்.பிடித்த காட்சிகளாக‌ எழுதினால்,ஏறக்குறைய படம் முழுவதும் எழுத வேண்டும்.பஞ்சவர்ணமாக நடித்த ரேவதி மற்றும் கவுதமி
என்று எல்லோருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.எனக்கு எல்லா பாடல்களும் பிடிக்கும்.

5.மகாநதி:

கமல் படங்களிலே என்னை ரொம்பவும் கவர்ந்த படம்.முதன்முதலில் சினிமா சூட்டிங் பார்த்த படம்.நான் கும்பகோணத்தில் ஸ்கூல் படிக்கும் போது,பக்கத்தில் மகாநதி சூட்டிங் நடந்தது.அங்கே "ஸ்ரீதேவி தேவி ரெங்க ரெங்க நாதனின் பாதம்" என்ற பாடல் எடுக்கப்பட்டது.கமல் மற்றும் சந்தானபாரதி இருவரையும் பார்த்தேன்.படம் மிக அம்சமான காட்சிகளுடனும்,சிறப்பான வசனங்களுடனும் எடுக்க பட்டிருக்கும்.கிளைமாக்ஸ் காட்சி மிக சிறப்பாக கையாளப்பட்டிருக்கும்.

6.குருதி புனல்:


கமல் மற்றும் அர்ஜீன் இருவரும் காவல் துறை அதிகார்களாக நடித்த படம்.பத்ரி என்ற வேடத்தில் நாசர் தனது திறமையை வெளிபடுத்திருப்பார்.ஓளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் இயக்கிய படம்.ஆங்கில படங்களுக்கு இணையாக காமிரா ஆங்கிள் வைக்கப்பட்டிருக்கும். "குருதி புனல்" என்ற தமிழ் பெயர் வைத்து வந்த தமிழ் படம்.அப்பொழுது தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற சட்டமில்லை என்பது குறிப்பிடதக்கது...!!!பாடல்கள் இல்லாத படம்...!!!

7.இந்தியன்:

சுதந்திர போராட்ட தியாகியாகவும்,R.T.O வாகவும் கமல் இரட்டை வேடங்களில் நடித்த படம்.இயக்குனர் ஷங்கரின் மூன்றாவது படம்.காட்சிகள்,இசை,வசனம் மற்றும் நடிப்பு என சரியான கலவையாக அமைந்த படம்.இதிலும் பிளாஷ்பக் காட்சிகள் மனதை நேருடும் வகையில் அமைத்திருக்கும்.வர்மக்கலையும்,இந்தியன் தாத்தாவும் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது.நகைச்சுவை காட்சிகளும் நன்றாக இருக்கும்."பச்சை கிளிகள்" பாடல் சிறப்பாக இருக்கும்.அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமை

8.ஹே ராம்:


1940ல் நடைபெறும் கதைகளமாக அமைக்கப்பட்டிருக்கும்.கமல் இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்திருப்பார்."சாக்கேத் ராம்" என்ற கேரட்டரில் நடித்திருப்பார்.இளையராஜா இசை கதைக்கு சரியாக பொருத்திருக்கும்.பிடித்த காட்சிகளாக பல இருக்கிறது.அதில் தனது கைத் துப்பாக்கியை ,காவல்துறையினரால் தேடப்படும் போது ஒரு ஊர்தியி ல் போட்டு விடுவார்.அவ்வூர்தியும் இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவே அங்கு தனது பழைய நண்பனான அம்ஜத்தையும் சந்திக்கும் காட்சி மற்றும் காந்தி ஆசரமத்தில் நடைபெறும் காட்சிகள் நன்றாக இருக்கும்."நீ பார்த்த பார்வை ஒரு நன்றி" என்ற பாடல் மனதை கொள்ளை கொள்பவை.

9.அன்பே சிவம்:

பயண‌ கதையாக அமைத்திருக்கும் படம்.கமலும்,மாதவனும் இணைத்து புவனேஷ்வரிலிருந்து சென்னைக்கு வரும் போது பிளாஷ்பாக் காட்சிகளாக படம் விரியும்.இப்படத்தில் "மதன்" அவர்கள் வசனம் எழுதியிருப்பார்.வசனங்கள் மிகவும் ரசிக்க தக்கவையாக இருக்கும்.நாசர் மற்றும் சந்தான பாரதியுடைய நடிப்பு நன்றாக இருக்கும்.முதலில் பிரியதர்ஷன் இயக்குவதாக இருந்தது,பின் கமலுக்கும்,அவருக்கும் ஏற்பட்ட மனகசப்பால் இயக்குனர் "சுந்தர்.சி" இயக்கியிருப்பார்.படத்தில் எல்லா காட்சிகளும் நன்றாகவே இருக்கும்.கிளைமாக்ஸ் காட்சியில் கமல் நடிப்பால் பிரமாதப்படுத்திருப்பார்."யார் யார் சிவம்" என்ற பாடலும் "பூ வாசம் புறப்படும் பெண்ணே" என்ற பாடலும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

10.விருமாண்டி:


திரைக்கதை தான் இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.விருமாண்டியின் பார்வையிலும் அவரது எதிரியின் பார்வையிலும் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக‌ நகரும்.விருமாண்டியாக‌ அச்சு அசலாக வெளிநாடு போய் திரும்பி வந்த கிராமத்து ஆளாக நடித்திருப்பார் கமல்.அவருடைய கெட்‍டப் அருமையாக இருக்கும்.இளையராஜா இசையில் பாடல்கள் நன்றாக இருக்கும்.கிணற்றுக்குள் உட்கார்ந்து காதலியோடு பேசுவது,மாடு ஓட்டிக் கொண்டு போகும்போது கமல் பேசிக் கொண்டு வருவது.இப்படியாக காட்சி அமைப்புக்கள் நன்றாக இருக்கும்.ஓரு கொலையை விருமாண்டி செய்ததாக எண்ணிஅபிராமி தூங்கிக்கொண்டிருக்கும் கமல் மீது பானையை போட்டு பேசும் வசனமும்,அதற்கு கமல் எதிர்வினையும் இயல்பாக,ரசிக்க கூடியவைகளாக இருக்கும்."உன்ன விட" என்ற பாடல் சிறப்பாக இருக்கும்.


குறிப்பு:‍
தொடர் பதிவை மற்றவரை தொடரச் சொல்வது தான் மரபு என்பத‌ற்க்கிணங்க..!இத்தொடர் பதிவை சூப்பர் ஸ்டாரின் விரும்பிகளை எழுத அழைக்கிறேன்.மாறுபட்ட விமர்சனமாக அமையும் என்றும்,ஆரோக்கியமான விமர்சனமாக அமையும் என்பதால்...தொடர் பதிவை எழுத‌
1.வெறும்பய
2.கொஞ்சம் வெட்டி பேச்சு
அழைக்கிறேன்....!!!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!

November 22, 2010

வெற்றி டைம்ஸ் 22/11/10


கடந்த வாரம் "திறந்த வெளி" என்ற பெயரில் எழுதிய பதிவு இனி "வெற்றி டைம்ஸ்" என்ற பெயரில்...
---------------------------------------------------------------

எடியூரப்பா = ஏடாகூட‌ம்?
முதல்வர் எடியூரப்பா தனது மகன்களுக்கு ஏக்கர் கணக்கில் நிலம் ஒதுக்கிய சிக்கலில் மாட்டிக்கொண்டு,தற்போது பதவியில் நீடிப்பாரா அல்லது அவருக்கு பதில் மாற்று நபர் முதல்வர் பதவியில் அமர்த்தப்படுவார்களா என்று பட்டிமன்றம் நடந்து வருகிறது.
காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழல்-முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்புவதற்கு எடியூரப்பா விவகாரம் இடையூறாக இருப்பதாக பாஜகவினர் கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன.அதனால் அவரை தில்லி வருமாறு பாஜக அழைத்திருக்கிறது.இந்தியாவில் அதிக சோதனையை சந்தித்த முதல்வர்...இவராக‌ மட்டுமே இருக்க முடியும்...!!!!எதிராளியால் போகாத பதவி..பாஜகவின்னாலேயே போகுமோ?
--------------------------------------------------------------------------------------------
உங்க டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க‌:

தொலைக்காட்சியில் நேர‌டி ஓளிப‌ர‌ப்பில் ஓவ்வொரு சேன‌லிலும் கால் ப‌ண்ணி பேசும் நேய‌ர்க‌ள் கால்பேசும் போது தொகுப்பாளினி நேய‌ர்க‌ளின் போனை மூயூட் அ ச‌வுண்டை குறைக்க‌வோ சொல்கிறார்க‌ள்.எக்கோ ஆகும் என‌ சொல்வார்க‌ள்.நேய‌ர்க‌ள் கால் ப‌ண்ணி பேசுவ‌தே அவ‌ர்க‌ள் பேசுற‌து டிவில‌ கேட்குறத,அவங்க வீட்டில‌ உள்ள‌வ‌ங்க‌ கேட்க‌னுன்னு உள்ள‌ ஆசையில‌ தான்...!இதுக்கு டெக்கினிக்க‌ல‌ ஏதாவ‌து செய்யுங்க‌ டெக்னிக்க‌ல் புழு க்க‌ளே(புத்த‌க‌ புழு போல‌ இது)...!!!
--------------------------------------------------------------------------------------------
மழை சீசன் இது:

டூவீலர் பயணம் செய்பவர்கள் கவனிக்கவேண்டியது.மழை பெய்யும் போதோ இல்ல மழை விட்டு இருக்கும் போதோ ரோட்டுல தேங்கியிருக்கிற மழை தண்ணி முன்னாடி போற வண்டி பின்னால் வரும் வண்டியில வர‌வங்கள குளிப்பாட்டி கிட்டே வருகிறது.முன்னல்லாம் வண்டி பின்னாடி வீல்ல லெதர் ஓண்ணு தொங்கும் அது மண்ணு கலத்த தண்ணிய தேக்கி பின்னாடி அடிக்க விடாது.இப்பொ வர்ற வண்டியில பேசன் ங்க்கிற பேர்ல பின்னாடி வீல் “மட்காட்” சின்னதா புது வண்டியில வர்து..இதுக்கு ஹேண்டில ஏதாவது சுவீட்சி போல வைச்சி,மழை நேரத்துல மட்டும் வெளியே வந்து,உபயோக படுத்திக்கொள்வது போல செய்யலாம்.
--------------------------------------------------------------------------------------------
வழக்கம் போல் சமூக விழிப்புணர்வுக்காக பிளாஸ்டிக் ஓழிப்பு பற்றிய அனிமேட்டட் வீடியோ:



--------------------------------------------------------------------------------------------
படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!

November 20, 2010

புயல்களுக்கு பெயர் ?


சென்னையில் ஓரு மழைக் காலம் இது...!பதிவெல்லாம் மழை,புயல் பற்றி வந்துக்கொண்டிருக்கிறது.பல பேரு கவிதை எழுதி கவிதைமழை ஏற்படுத்துறாங்க...!!!!நானும் மழை,புயல் பற்றிய ஓரு செய்திய போட்டுவிடுகிறேன்.சமீப வருடங்களாக, புயல் வரும்போது,அதன் கூடவே ஓரு அழகிய பெயரும் ஓட்டிக்கொண்டு வருகிறது.எனக்கு இந்த புயல்களுக்கு யார் பெயர் வைக்கிறார்கள்? என தெரிந்துக் கொள்ள ஆசை இருந்தது,வழக்கம் போல் நண்பர்களிடமும்,இணையத்திலும் கிளிக்'ய போது எனக்கு கிடைத்த தகவல் ஓரு தொகுப்பாக உங்கள் பார்வைக்கு.

புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் 20ம் நூற் றாண்டின் முற்பகுதியிலும் இருந்துள்ளது. அப்போது, ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர், தங்களுக்கு பிடிக்காத அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். அமெரிக்காவில் 1954ம் ஆண்டில் புயல்களுக்கு பெயர் சூட்டும் நடைமுறை வந்துள்ளது.

இந்தியாவில் வானிலை ஆய்வு மையங்கள் 1ஏ, 1பி என்று ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி புயலுக்கு பெயர் வைத்து வந்தன.கடந்த 2000ல் உலக வானிலை அமைப்பு மற்றும் பசிபிக் மற்றும் ஆசியாவுக்கான பொருளாதார சமூகக் கமிஷன் நடத்தியக் கூட்டத்தில் வடஇந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் தோன்றும் புயல்களுக்குப் பல்வேறு பெயரிடப்படும் முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்தியாவில் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004ம் ஆண்டில் இருந்து உருவானது.

இந்திய ஆய்வு மையம் சிறப்பு மிக்க வானிலை ஆய்வு மையமாக விளங்குவதால்,இந்தியா தவிர வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் இலங்கைக்கும் வானிலை தொடர்பான முன் அறிவிப்புகளை வழங்கி வருகிறது. வானிலை பற்றிய தகவல்களைத் தரும் போது, புயல்களுக்கு என்னென்ன பெயர்கள் வைக்கலாம் என்பதை தெரிவிக் கும்படி, அந்த நாடுகளை கேட்டது. பின்னர் உறுப்பினர் நாடுகள் தெரிவித்த பெயர்களை அகர வரிசைப்படி பட்டியலிட்டுள் ளது.

8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்களை கொண்ட பட்டியலை தயாரித்திருக்கின்றன.இந்த பட்டியலில் இருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்பட்டு வருகின்றன. ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்படுகிறது. இதுபோல், 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன.புயல் உருவாகி கரை கடந்ததும், பட்டியலில் இருந்து அந்த பெயர் நீக்கப்படுகிறது. பிறகு, அந்த நாட்டின் சார்பில் புதிய பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது.

எப்படி பட்ட பெயர்களாக இருக்க வேண்டும்?

#பெயர்கள் சிறிய வார்த்தை கொண்டதாவும், உச்சரிப்பதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும்.
#பண்பாட்டிற்கு எதிரானதாகவோ, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது.
#தனிநபர்களின் பெயர்களாகவும் இருக்கக் கூடாது.

புயல்களுக்கு வெவ்வேறு பெயர்கள் இடுவதன் நோக்கமே, மக்கள் அவற்றை அடையாளம் கண்டறிந்து எச்சரிக்கையாக இருக்கத்தான். வானிலை ஆய்வு மையங்கள் பல விதமான பெயர்களைச் சூட்டி குழப்பம் உண்டாக்குவதை தடுக்கவும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எண்கள் மற்றும் துறை சார்ந்த சொற்களை நினைவில் வைத்துக் கொள்வதை விட, சிறிய வேறுபட்ட பெயர்கள் மக்கள் மனதில் எளிதில் பதிந்து விடுகின்றன .கடைசியாக வந்த ஜல் ஜில் அனுபவத்தை மட்டுமே சென்னைக்கு தந்தது...!!!!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!
பின்னூட்டம் போடுங்க..!!

November 15, 2010

திறந்தவெளி 15/11/2010


எனது முந்தைய பதிவில் சினிமா விமர்சனம் முதன்முறையாக எழுதினேன்.அதற்கு ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..!நன்றி..!
க‌லவை (அ)தொகுப்பு செய்திக‌ள் எழுதி சுவ‌ர‌ஸ்ய‌ ப‌திவாக‌ மாற்ற‌லாம் என க‌ண்டுபிடித்த‌ ப‌திவுல‌க‌ ச‌க்க‌ர‌வ‌ர்த்திக்கு ந‌ன்றி..!ந‌ன்றி..!!!(குரு வணக்கம்).இன்னொரு விச‌ய‌ம் இம்மாதிரியான‌ ப‌திவுகளுக்கு த‌லைப்பை பிடிப்ப‌து என்பது மகா கஷ்டம்.அதிலும் அடித்து,பிடித்து ஏதோ த‌லைப்பை க‌ண்டுபிடித்துவிட்டு ப‌திவுல‌கில் பார்த்தால் ந‌ம‌க்கு முன்னாடியே ஏதோ ம‌க‌ராசன்கள் அந்த‌ பெய‌ரில் கும்மிய‌டிக்கிறார்க‌ள்.

அப்புற‌ம் கற்பனை பஞ்சம் வந்தாலும் வரும்...!ஆனா த‌மிழில் வார்த்தைக‌ளுக்கா ப‌ஞ்ச‌ம்?ப‌ர‌ந்து விரிந்த‌து உல‌க‌ம்..!த‌மிழ் மொழியே திற‌ந்த‌வெளி பல்கலைகழகம் போன்றது.அதில் கிடைக்காத‌ வார்த்தைக‌ளா?ஆ வார்த்தையை பிடிச்சாசு.."திற‌ந்த‌வெளி" இனி ஒரு புது முயற்சியாக வார வாரம் "திறந்தவெளி" என்னும் பெயரில் அந்தவார நிகழ்வுகளும் எனது கருத்துக்களும் மற்றும் நான் ரசித்த,சொல்ல நினைக்கிற‌ விசயங்களையும் பற்றிய தொகுப்பாக‌ பதிவை எழுத‌ உள்ளேன்.உங்க‌ள் ஆதரவு,எதிர் க‌ருத்துக்க‌ளை பின்னூட்ட‌மாக‌ எதிர்ப்பார்க்கிறேன்.‍‍‍‍

-------------------------------------------------------------------------------------
கோட்டையில்லை கொடியில்லை அப்பவும் நான் ராஜா..!!!

நேற்றிரவு திரு ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முன்னாள் ‌மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆகியிருக்கிறார்..!இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட காத்திருத்தன எதிர்கட்சிகள்.
இதற்கிடையில் ராசா வகித்த பதவியை திமுக அமைச்சர்களுக்கு கொடுக்கக்கூடாது என திரு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆரம்பித்துவிட்டார்.இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு அது மீண்டும் கிடைக்குமா?ன்னு தெரியலை..!!!தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்துச்சோ இல்லியோ..!நம்ம கிட்ட அந்த பதவி இருந்த பீலீங் இப்பொ கிடைக்காது..!!!எது எப்படியோ ராசா விவகாரம் வடநாட்டு சேனல்களுக்கு நல்ல தீனீ..!!!

-------------------------------------------------------------------------------------
பாடவா டூயட் பாடலை
குரல் தேடலுக்கு குரல் கொடுத்து கலைஞர் டிவியில் விளம்பரம் வருகிறது.இவர்கள் குரல் தேடலை வேறு விதமாக ஆரம்பித்துவிட்டார்கள்.தனி தனியாக பாடிக் கொண்டிருப்பதை பார்த்து போர் அடித்துவிட்டது.இனி ஜோடியாக பாடுவதை குறிப்பாக தம்பதி சகவிதமாக டூயட் பாடுவதை காணலாம்.இந்நிகழ்ச்சி கலைஞர் டிவியின் டி.ஆர்.பி ரேட்டை கூட்டுமா? பார்ப்போம்...!!

-------------------------------------------------------------------------------------

கேமரா கண்ணில் பட்டு வாழ்..!!!

நிறுவனங்களில் மற்றும் பள்ளிகளில் கேமிரா பொறுத்துவது இன்று பேசஸனாகிவிட்டது (அ) கட்டாயமாக்கப்பட்டுவிட்டது..!.காசி தியேட்டரில் கழிவறையில் கேமிரா என கேள்விப்பட்டோம்.இம்..இம்..பாதுகாப்பு என்கிற பெயரில் ஏதோ அன்னிய கண்ணில் நாம் பதிவாகி கொண்டிருக்கிறேன் என்ற உணர்வே ஓரு மாதிரியாக இருக்கிறது...மற்றும் அவசரத்துக்கு தலையில் அறிப்பெடுத்தால் தலையை சொறிஞ்சால் கூட இந்த தேதியில்,இந்த நேரத்தில் இந்த நிமிடத்தில் இந்த ஆள் தலையை செறிஞ்சார் என டேடாபெஸ் சொல்லும்.இது வரமா?சாபமா? தெரியவில்லை..!!!வருங்காலங்களில் வீட்டைவிட்டு இறங்கியவுடன் தெருக்களில்,சாலைகளில்,பேருந்துகளில்..இப்படியாக பாதுகாப்பு என்கின்ற பெயரில் கேமராக்கள் வரும்....இதற்கு மாற்றாக வாழ முடியாது...ஊரோடு ஓட்டி வாழ பழக வேண்டும்...பழகுவோம்..!!!!

------------------------------------------------------------------------------------
தண்ணீர் அவசியம் பற்றிய வீடியோ காட்சி கீழே...



படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!
பின்னூட்டம் போடுங்க..!!

November 06, 2010

மைனா - காதல் பயண‌ம்


எனது முதல் திரைவிமர்சனம் இது.முடிந்த வரை நன்றாக எழுத முயற்சித்திருக்கிறேன்.தீபாவளி ரீலீஸில் திரைப்பட டிரைலர் மற்றும் விளம்பரங்களால் மற்றும் இயக்குனர் பிரபு சாலமன்னுக்காகவும் என்னை பார்க்க தூண்டிய திரைப்ப்டம் " மைனா".கமலா சினிமாஸில் நேற்று இரவுகாட்சியாக‌ பார்த்தேன்.பிரபு தனது படங்களில்,சிற் சில விசயங்களை கையாள தெரியாமல் முயற்சித்து,தோற்று...தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க தவறியவர்.

கதைசுருக்கம்:

தேனீ மாவட்டம் குரங்குனி என்ற மலைக்கிராமம் தான் கதைக்களம்.தீபாவளிக்கு முந்தைய நாளும்,தீபாவளியென்றும் நடக்கும் சம்பவங்களே கதை.பெரியகுளம் கிளைச்சிறையில் இருந்து ஆரம்பிக்கிறது கதை.சிறுவயதிலேயே நாயகன்(சுருளி) நாயகியோட அம்மாவுக்கும்,நாயகி(மைனா)க்கும் தனக்கு தெரிந்த பாட்டியின் மூலம் அடைக்கலம் கொடுக்கிறான்.மைனாவின் மேல்,சிறு வயது முதல் ஏற்பட்ட‌ அன்பு வளர்ந்துகொண்டே வந்து அவள் பூப்பெய்தும்போது காதலாக முழுமையடைகிறது. அவள்மேல் உயிரையே வைக்கிறான். அவள் தனக்குத்தான் என்று நம்புகிறான்.சூழ்நிலையில் நாயகி அம்மா காதலை எதிர்க்க, நாயகன் அடிக்க வர போலீஸ் அவரை கொலைமுயற்சி என‌ கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்கிறது. விடுதலையாக 2 நாட்களே உள்ள நிலையில் நாயகிக்கு அவரது தாய் வேறு திருமண ஏற்பாடு செய்ய நாயகன் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்து நாயகியை மீட்டேடுக்கிறார். அதே சமயம் நெருக்கடியான சூழலில் இருக்கும் போலீசார் மீண்டும் நாயகனை கைது செய்து,சிறைக்கு கூப்பிட்டு வர வழியில் ஏற்படும் சம்பவங்களே மீதி கதை.


நாயகன் வித்தார்த் நன்றாக நடித்திருக்கிறார்.முக சாயலை பார்பதற்கு விக்ரம் மற்றும் மனோரமா மகன் பூபதியையும் நினைவூட்டுகிறது எனக்கு..!!!!கதைக்கு ஏற்ற நாயகன்...!!!வித்தார்த் முகத்தில் ஏதோ வசீகரம் தெரிகிறது.வரும் படங்களில் பார்ப்போம்.

நாயகி அமலாபால் அழகாக , மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார்,நன்றாக இருக்கிறது.இக்கதையில் அமலா இடத்தில் அஞ்சலியாக இருந்தாலும் ரசிக்கலாம்...!!!இருப்பினும் அமலா ரசிக்க முடிகிறது..!!!தமிழ் சினிமாவில் வருகின்ற படங்களில் இவரை காணலாம்.

மற்றபடி இன்ஸ்பெக்டராய் வரும் சேது ,ஜெயிலர் தம்பி ராமையா, மைனாவின் அம்மா,பொணம்தின்னி,நாயகன் உடன் வரும் அதிகம் பேசும் பையன்,சேது மனைவி மற்றும் அவரது குடும்பம் என்று எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இமான் இசையில் எல்லாப் பாட்டுகளும் நன்றாக இருப்பதோடு ,பாட்டின் வரிகள் அழகாக புரிகிறது.படமாக்கிய விதமும் அருமை.ப‌டத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் மற்றும் கலை இயக்குனர் வைரபாலனும். தங்களது திறமையினால், நம் மனதில் இடம்பிடிக்கின்றனர். தேனி மாவட்ட அழகை குறிப்பாக குறங்கினி, மூணார் போன்ற‌ பச்சைப்பசேல் இடங்களை நமக்கு காட்டிய‌ படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.


பிடித்த காட்சிகள்:
@ சைக்கிள்:
நாயகியை,நாயகன் பள்ளிக்கு சைக்கிளில் அழைத்து வரும் காட்சி.
@பயண‌ம்:
ஜீப் களில் மலை பாதையில் பயணம் செய்யும் காட்சிகள்.தத்ரூபமாக எடுக்கப்பட்டுயிருக்கிறது.
@ தோளில் சுமத்து வரும் காட்சி :
நாயகன் நாயகியை தன் தோளில் சுமந்து வரும் காட்சி.
@ பஸ் விபத்து காட்சி: ‍‍
நாயகன் காப்பாற்றும் காட்சி அருமை. காட்சி அமைப்பு ஆங்கில படங்களுக்கு இணையாக.

@ எதிர்பாராத கிளைமாக்ஸ்:

நல்ல கிளைமாக்ஸ் .நன்றாக எடுக்கப்பட்டுள்ளது.என்னால் யூகிக்க முடித்தது...!!!

இயக்குனர் இந்த திரைபடத்திலும் திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விட்டுயிருப்பது உண்மை...!!! எனினும் தனக்கான இடத்தை கைப்பற்றிவிட்டார் என்பதும் உண்மை..!!!
சில குறைகள் இருந்தாலூம் ...!பல பேரின் உழைப்பு மற்றும் இயக்குனரின் விடாமுயற்சிக்காக‌ பார்க்கலாம்..!!!!

மைனா ‍- காதல் பயண‌ம்


படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!
பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்).

October 21, 2010

சென்னையின் தேவைகள்-1(தொடர் பதிவு)


சென்னையைப் பொறுத்தமட்டில், போக்குவரத்து நிர்வாகம்(Traffic management )என்ற சொல்லக்கூடியே ஒரு அணுகுமுறையே இல்லை. பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகத் தான் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு, மத்திய, மாநில‌ அர‌சுக‌ள் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.இச்சாலை மேம்படுத்தும் பணிகளும் பல்வேறு பிரச்சனைகளால்(கான்ட்ராக்டர்கள்,அதிகாரிகள் மெத்தனம், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்)பல கிடப்பில் கிடக்கிறது.வருகிற தேர்தலை முன்னுர்த்தி இனி விரைவாக நடக்கும் என்று நம்புவோமாக..!தரமற்ற சாலைகளில் மின்னல் வேகத்தில் பறந்து செல்வதால் விபத்துக்களும்,உயிரிழப்புகளும் தான் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

கடந்த 2008‍ம் ஆண்டு புள்ளி விபரத்தின் படி சென்னை மாநகரில் மட்டும் 6823 விபத்துக்கள் நடந்துள்ளதாக சொல்கிறது.மோசமான சாலை காரணமாக நடந்த 2 விபத்துக்களில் 3 பேர் இறந்துள்ளனர்.இருசக்கர வாகனங்களால் நடந்த 180 விபத்துக்களில் 183 பேரும், மூன்று சக்கர வாகனங்களால் நடந்த 68 விபத்துக்களில் 69 பேரும், இதர வாகனங்கள் மூலம் நடந்த 112 விபத்துக்களில் 117 பேரும் உயிரிழந்துள்ளனர்.இந்த‌ விப‌த்துக்க‌ளுக்கு கார‌ண‌ங்க‌ளாக‌ அறிய‌ப‌டுப‌வை மோச‌மான‌ சாலை,போக்குவ‌ர‌த்து விதிமீற‌ல்க‌ள்,வாக‌ன‌ ஓட்டிக‌ளின் க‌வ‌ன‌மின்மை போன்ற‌வை.

சாலையின் நடைபாதை முழுவதும் நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.சென்னையில் சாலை இருபுறங்களில் உள்ள நடைபாதையில் 200mtrs வ‌ரைக்கூட‌ தொடர்ந்து நடக்க முடியாத சூழல் தான் காணப்படுகிறது.சாலை என்பது வாகனங்களை பயன்படுத்துவதற்கு, கார், பேருந்து,டூவீலர் போவதற்குதான் என்று ஆகிவிட்டது. சைக்கிள் போவதற்கோ, நடப்பதற்கோ இல்லை என்று ஆகிவிட்டது.மோட்டாரற்ற போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஏட்டில் மட்டுமே இருக்கிறது. மோட்டாரற்ற போக்குவரத்து என்றால் நடப்பதும் சைக்கிளும்தான். இந்த இரண்டுக்கும் ஒன்றுமே செய்யவில்லை என்பது வேதனையான விசயம்.

வயதில் முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் நடந்து வெளியே சென்று வீட்டுக்கு வந்துவிட்டால்,ஆயுள் இன்னொறு நாள் கூடிவிட்டதாகவே எண்ணும் அளவுக்கு சாலைகள் இருக்கிறது...!!.நடைபாதை வியாபாரிகளுக்கு வணிக வளாகம் திறக்கப்படவேண்டும்.(தி.நகரில் பாண்டிபஜார் உட்பட 3 இடங்களில் திறக்கப்பட்டும்,தொடர்ந்து வழியிலேயே கடை பரப்பி வருகின்றனர்...!)

மாநகருக்குள் நுழைந்துவிட்டால் தேவையான வழிதகவல் (sign boards) கொண்ட குறிப்புகள் இல்லை.புதிதாக வருபவர்கள் பாடு திண்டாடம் தான்..!!!நீங்கள் சிக்னலில் நிற்கும்போது,உங்களிடம் வழிகேட்டோர் பல எண்ணிக்கையில் தான் இருந்திருப்பார்கள்...!சாலைகளில் போக்குவரத்து திருப்பிவிடுதல்( டிராஃபிக் டைவர்ஷன்) ஒன் வே டிராஃபிக், டூ வே டிராஃபிக் என்று மாற்றியமைத்து விடுகிறார்கள்.இதனால் பலன்கள் உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது...! உ.தா.அசோக் பில்லர் ஓன் வே முதலில் கொண்டுவந்தார்கள்,பின் எடுத்தார்கள் ...... மாற்றியமைக்கப்பட்டு மறுபடியும் ஓன் வே நடைமுறையில் உள்ளது.இதில் அறிவியல் பூர்வமான அணுகுமுறை கிடையாது, முன்னோட்டம் கிடையாது.

சாலையில் ஓரங்களில் கண்ட கண்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. மேலும் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மினிகார்கள் பஸ் ஸ்டாப்புகளில் நிறுத்தப்படுவதால் மாநகர பேருந்து சற்று தள்ளி நிறுத்தப் படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. குறிப்பாக அலுவலக நாட்களில் காலை, மாலை நேரங்களில் பீக் அவர்'களில் சாலைகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சில‌ போக்குவரத்து போலீசாரும் ஏனோத‌னோ என்ற‌ பார்வையில் கண்டுகொள்வதில்லை.

கட்டுமானத்திற்கு சாலை ஆக்கிரமிக்கப்படுகிறது.அப்புறம் டாஸ்மாக் கடை இருக்கும் சாலை நடக்க,மோசமாக இருக்கும் வழியிலேயே குடிப்பார்கள்,குடித்துவிட்டு நடப்பவர்கள் நடை நம்மை அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.இப்படி சாலையில் போவது என்பது பயங்கரமான அனுபவமாக உள்ளது. ....!!!!இதற்கெல்லாம் தீர்வு...!!!???

பதிவுகள் தொடரும்....

படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)

October 18, 2010

சென்னையின் தேவைகள்



உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சென்னை,பெங்களூரு மற்றும் அஹமதாபத் உள்ளிட்ட 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.சீனாவின் உள்பகுதியில் உள்ள நகரங்கள் போக்குவரத்து வசதிகள் உள்ளவையாகவும் வணிகம் செய்ய ஏற்றவையாகவும் இருப்பதாகக் கூறியுள்ள போர்ப்ஸ் என்ற அமெரிக்க இதழ்.இந்தியாவில் சரியான‌ திட்டமிடபடவில்லையென்றாலும் சீனாவைப் போன்றே சிறிய நகரங்களின் வளர்ச்சி இருக்கிறது என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் முக்கியத் தொழில் துறைகளான வாகன உற்பத்தி, மென்பொருள் உற்பத்தி மற்றும் பொழுது போக்கு ஆகியவை சென்னை உட்பட மூன்று நகரங்களில் உள்ளதாகவும் போர்ப்ஸ் கூறியுள்ளது.

2025ஆம் ஆண்டு 1 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சென்னை, நடப்பாண்டில் இதுவரை 1 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. டில்லி, மும்பை உள்ளிட்ட மற்ற இந்திய நகரங்களைவிட இது அதிகம் என்று போர்ப்ஸ் கூறியுள்ளது.

இதை படிக்கும்போது ந‌ம‌க்கு எல்லாம் பெருமையாக தான் இருக்கிறது..!போர்ப்ஸ் கூறிய‌தில் நாம் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து முறையாக‌ திட்டமிட‌ப‌ட‌வில்லையென்றாலும்,வ‌ள‌ர்ச்சியை நோக்கி நாம் போய்க் கொண்டிருப்ப‌து.இது எவ்வ‌ள‌வு நாள் நீடிக்கும் என்று சொல்ல‌முடியாது,ஆக‌வே நாம் திட்ட‌மிட‌ நேர‌ம் வ‌ந்துவிட்ட‌தாக‌வே தெரிகிற‌து.ச‌ரி சென்னையில் நாம் இப்போது ச‌ந்திந்துக் கொண்டிருக்கும் பல பிர‌ச்ச‌னைக‌ளில் சிலவற்றை ப‌ற்றி பார்ப்போம்.

1. போக்குவ‌ர‌த்து பிர‌ச்ச‌னை.
2. ஆட்டோ வாட‌கை கொள்ளை.
3. வீட்டு வாட‌கை கொள்ளை.

விரிவாக அலசுவோம்.... தொடர் பதிவுகளாக எழுத எண்ணுகிறேன்....


படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

October 14, 2010

உடல்நலனில் தண்ணீரின் பங்கு


தண்ணீர் வைத்தியம் பல பேரால் கூறப்பட்டு,நீங்கள் கேள்விபட்டியிருக்கலாம்.ஏன் இங்கயே எழுதப்பட்டிருக்கலாம்?இருந்தாலும் ஓரு நல்ல விசயத்தை திரும்ப,திரும்ப சொல்லுரது தப்பில்லன்னு நினைக்கிறேன்.பல்வேறு தளங்கள் மற்றும் இதழ்கள் படித்ததின் விளைவு இந்த பதிவு...!காலையில் எழுந்து,வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துதல்...!இந்த பழக்கம் ஆரோக்கியமான உடல்நலத்தை தரும்..!

தண்ணீர் அவசியம் :

1. அசைவ உணவு, பால், தக்காளி போன்ற ஆக்ஸலேட் உப்பு அதிகம் உள்ள உணவை அதிகம் சாப்பிடுபவர்கள்.
2. தினமும் கீரை சேர்ப்பவர்கள் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும்.
3. ஜாக்கிங் செல்பவர்களும், உடற்பயிற்சி செய்பவர்களும் உடலில் நீர்ச்சத்தை வியர்வை மூலம் அதிகம் அகற்றுகிறார்கள். அதே நேரத்தில் இந்த இழப்பை ஈடுகட்டப் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
4. உணவில் உப்பை நிறையச் சேர்த்துக் கொள்பவர்கள்,அவசியம் உட்கொள்ள வேண்டிய மருந்து தண்ணீர்.
5. 50 கிராமிற்கு மேல் வேர்க்கடலை சாப்பிடுவதும் உடலில் நீர்ச்சத்தைக் குறைத்துவிடும்,ஆகவே தண்ணீர் அருந்துங்கள்.

இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்...

நாளோன்றுக்கு ஒரு முறை குடிக்கும் அளவாக‌ 250 மில்லி வீதம் 8 முறையாவது ஒவ்வொருவரும் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும்.காலை எழுந்தவுடன் தண்ணீர் குடித்து விட்டு,இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை என கூறப்படுகிறது.குடித்த தண்ணீரை வற்றவைத்து விடுமாம் காபியில் உள்ள காபின்...!

முக்கியமாக அழகை பற்றி கவலைப்ப்டுபவர்கள்,அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும்.அது முகச்சுருக்கத்தை நீக்கும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.(இந்த ஓரு காரணம் போதுமே..!)

இரவு நேர பணிக்கு செல்பவர்கள் குடிக்க வேண்டிய அருமருந்தும் தண்ணீர்.பணி முடிந்து காலையில் சிறுநீர் கழிக்கும் போது கவனித்தால் "மஞ்சள்" நிறத்தில் வெளியேரும் மாறாக இரவு நேர பணியில் இருக்கும் போது தண்ணீர் குடித்தால் மாற்றம் தெரியும்.

தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.மாற்றாக நாவின் சுவை உணர்வோடு கொஞ்சம்,கொஞ்சமாக பருக வேண்டுமாம்.

இரவு நேரத்தில் தூக்கம் கலைந்து சிறுநீர் கழித்தால்,குடி தண்ணீர் நன்கு அருந்திய பிறகு படுக்கைக்குச் செல்லுங்கள் என கூறப்படுகிறது(தண்ணீர் குடித்துவிட்டு,தொடர்ந்து தூக்கம் வராது சிலருக்கு.)

சிலர் நன்கு தண்ணீர் அருந்தினால்,அடிக்கடி சிறுநீர் கழிக்கப் போகவேண்டும் என்பதற்காகவே தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கிறார்க்ள.குறிப்பாக நீண்ட நேரம் பேருந்தில் பயணிக்கிறவர்கள் இதே போல் தவிர்த்து விடுகிறார்கள். இது நல்ல பழக்கமல்ல. ..! இருப்பினும் பயண‌முடிவில் இறங்குவதற்குச் சற்று முன்பும், பயணத்திற்கு இருமணி நேரம் முன்பும் தண்ணீர் அருந்தலாம்.பேருந்துப் பயண‌த்தில் அவசியம் பயணிகள் கையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு செல்வது மிகவும் உகத்தது...!

தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்கின்றனர் பலர்.அவ்வாறில்லாமல் அடிக்கடி தண்ணீர் குடுக்க வேண்டும்.தண்ணீர் நிறைய குடிப்பதால் நமது செயல்திறனும் கவனமும் அதிகரிக்கும்..!தினமும் தண்ணீரை நன்கு அருந்தி உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...!தண்ணீர் நன்கு அருந்துவதால் பல நோய்கள் குணமாவதுடன் மன இறுக்கம் அகலும்...!உடல்நலனில் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது..!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

October 08, 2010

மரங்களை வேரறுப்போம்..!!



"மரங்கள் வளர்ப்போம்" என்ற கோஷத்தை கேள்விப்பட்டுயிருக்கிறோம்.அது என்ன
" மரங்களை வேரறுப்போம்" என்று சொல்கிறேன் என்று பார்க்கீறீர்களா?சமீபகாலங்களாக சமூக ஆர்வலர்களும்,சில நாளிதழ்களும் ஓரு மரத்தைப் பற்றி கூறிவருகிற தகவல் நமக்கு அதிர்ச்சி தருபவைகளாக இருக்கிறது.

காட்டுகருவை என்றும்,சீமை கருவை என்றும் வேலி காத்தான் என்றும் அழைக்கப்படும், இந்த விஷ அரக்கனை முற்றாக அழிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.எதற்காக இந்த மரத்தை அழிக்க‌ வேண்டும்? என்ற கோஷம் வெளிவருகிறது என்பதை பார்ப்போம்.இந்த‌ ப‌திவில் நான் "சீமை கருவை" என்ற சொல்லையே பயன்படுத்திருக்கிறேன்.சீமையிலிருந்து நம் கருவை(சந்ததியை) அழிக்க வந்தது என்ற பொருளில்..!


சீமை கருவை:
1. மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை.
2. வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது.
3. வெப்பத்தைக் மட்டுமே கக்கும் தன்மைக் கொண்டது.
4. ஆக்சிஜனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது.இதனால் சுற்றுப்புற காற்று மண்டலம் நச்சு தன்மைக்கு மாறுகிறது.
5. நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு...!
6. முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளமையோடு வளரமுடியாது.
7. வெட்டினால் மட்டும் அழித்துவிடாது,வேரோடு அழிக்கவேண்டும்.
8. இதில் எந்த பறவையும் கூடுகட்டுவது இல்லை.(ஐந்தறிவு உயிரினம்...!நாம்?).
9. மரத்தைச் சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன.
10. முட்கள் விஷ‌த்த‌ன்மை கொண்ட‌வை.


எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமை கருவை மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி ,தனது இலைகளை வாட‌விடாமல் பார்த்துக்கொள்கிறது.நாமலே பல வழிகளில் நீரை தேவையில்லாமல் செலவிட்டு வருகிறோம்,இதில் இது வேறு..!பார்க்க போனால் நம் அரசியல்வியாதிகளை விட சுயநலமாக இருக்குதே..! நிலத்தடி நீரை முடிந்த வரை உறிஞ்சிவிடுவதால், பூமி தானாகவே வறண்டு விடுகிறது.இது தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகம் வளர்ந்து காணப்படுகிறது.


சீமை கருவை மற்றும் யூகலிப்டஸ் மரமும் நம் நாட்டு தாவரங்கள் இல்லை,இறக்குமதி செய்யப்பட்டவை. இரண்டும் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சுபவை.சீமை கருவை விதைகள் மெக்சிகோவிலிருந்து வரவழைக்கப்பட்டு காமராஜர் அவர்கள் காலத்தில் ஆகாயத்தில் இருந்து தூவப்பட்டன என தெரிகிறது.அமெரிக்கா உணவு உதவி வழ‌ங்கும்போது இலவசமாக கொடுத்தது ;அப்போதைய காங்கிரஸ் அரசு இதை சரியாக ஆராயாமல் இந்த மரம் விறகுக்கு ஆகும் என்று அனுமதிததாக தகவல்.


அமெரிக்காவில், சீமை கருவை மரங்களை வளர்க்கவிடுவதில்லை. அங்குள்ள தாவிரவியல் பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள மரங்கள் குறித்த பட்டியல் குறிப்பிடப்பட்டியிருக்கிறது என்று கூறப்படுகிறது.நமக்கு கொடுக்கும்போது இது நச்சுத்தன்மை வாய்ந்தது என அமொரிக்காவுக்கு தெரிந்ததா? என தகவல் இல்லை.பேராண்மை திரைப்படத்தில் சீமை கருவை அடியோட அழிக்க வேண்டும் என்பதாக காட்சி வைக்கப்பட்டதற்கு இயக்குனர் S.P.ஜன‌நாதனுக்கு நன்றி..!


இரு மரங்கள் புதிதாய் வைப்பதற்க்கு சமம். ஒரு சீமை கருவை அழிப்பது. மரம் நடுவோம் என்ற கோஷத்தை விட நாம் அதிகம் பின்பற்றவேண்டியது, இருக்கும் சீமை கருவை மரங்களை வேரறுப்போம் என்பதே!


விறகு கரி, விறகு, வேர் கட்டை, தூர் கட்டை, வேலி கம்புகள் என சீமை கருவையின் பாகங்களை பிரித்து மேய்ந்து விற்பனை செய்து ஈட்படும் தனிநபர் லாபத்திற்காக ஒட்டு மொத்த பூமி பழியாவதை தடுக்க வேண்டும்.அரசு அலுவலங்கம் மற்றும் நிலங்களில் வெற்றி வாகை சூடியது போல் நின்று காட்சி தரும் மரங்களை அரசு அழிக்க வேண்டும். இந்த மரங்களை அழித்துவிட்டு அந்த இடத்தினில் நன்மை பயக்கக்கூடிய வேறு மரங்களை நடுதல் வேண்டும்.பொதுமக்கள் தரப்பில் இது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும்...!



படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

September 27, 2010

நடுரோட்டுல நம்பர் தெரியாம நின்னுயிருக்கீங்களா?


நீங்க சென்னைல,அம்பத்தூர்லருந்து கிளம்பி பெருங்குடி போய்,உங்கள் நண்பனை அலுவலகத்தில் பார்க்க போய்கிறீர்கள்.உங்க நண்பண் "மச்சி என் ஆபிஸ் பக்கத்துல வந்து கால் பண்ணு வெளியே வரேன்னு சொல்லுராறு".நீங்களும் பல டிராபிக் கஷ்டங்களைத் தாண்டி(வெள்ளை சீருடை தரகர்களைத் தாண்டி..!)நண்பண் ஆபிஸ் பக்கத்துல போய், பேசுறதுக்கு மொபைல எடுத்த ஆப் ஆயிடுச்சி,திரும்பவும் ஆன் சென்சா ஆன் ஆகல‌ன்னு வச்சிக்ங்க,உங்களுக்கு நண்பண் நம்பரும் நினைவில இல்ல(நினைவில் வைத்திருப்பதில்லை என்பதே உண்மை..!)என்ன செய்வீங்க?


நம்ம சோம்பேறியா இருக்குறத்துக்கு,விஞ்ஞானம் தான் காரணம் சொன்னா இல்லன்னு சொல்லவா போறிங்க?இப்பொ எல்லா தேவைகளும் கைக்கு அடக்கமாக கிடைப்பதால்,நமது மூளைக்கு பெரும்பாலும் வேலை கொடுப்பதில்லை.


80,90க்களில் இந்தியா மற்றும் அயல்நாடுகளில் மிக சிறந்த வல்லுனர்களாக திகழ்ந்தவர்கள் எல்லோருக்கும் மனக்கணக்கு,நினைவுத்திறன் போன்றவையும் வெற்றிக் காரணமாக இருந்திருக்கிறது.இன்றைய இளைய தலைமுறைகளிடம் கொஞ்சம் காணாமல் போய் கொண்டிருக்கின்றன என்பது உண்மையே..!


அதற்கு நாமும் கூட விதிவிலக்கல்ல.அன்றைய காலக்கட்டத்தில் உதாரணமாக வாய்ப்பாடு(Multiplication Tables)மேலிருந்து கீழாகவும்,கீழிருந்து மேலாகவும் 20‍ம் வாய்ப்பாடு வரை மனனம் செய்து வைத்திருப்பார்கள்.இன்றைய நாட்களில் இதை திக்கி தடுமாறி சொல்ல‌முடியாமலும்,கால்குலேட்டர் உதவியில்லாமல் கணக்கு போட தெரியாதவர்கள் தான் அதிகம்.


மொபைல் போன் வருவதற்கு முன், நெருங்கிய, முக்கியமான நபர்களின் தொலைபேசி எண்களை தெரிந்து வைத்திருந்தோம். ஆனால், இன்று...?யாராவது தொடர்பு கொள்ள எண் கேட்டால்,உடனே மொபைல் போனைத் தான் தேடுகிறோம்.முக்கிய நபர்களின் எண்களைக் கூட மனனம் செய்து வைப்பதில்லை.மொபைல் போன் தொலைந்தால்,எண்கள் மறையும்; நட்பு வட்டமும் மறையும்.காரணம், எந்த எண்களுமே நினைவில் இல்லை..!நினைவில் வைத்திருப்பதில்லை என்பதே உண்மை என்று மேலேயே சொல்லிவிட்டேன்.


வெகு சிலரோ வீட்டில் டைரி மற்றும் கணிணியில் பதிவு செய்து வைத்திருப்பது வேறு விஷயம்...! நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கும் போது, டைரியையோ அல்லது கணிணியோ தேடி செல்ல இயலாது? அதுவும், முக்கிய அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் போது, மொபைலை பறி கொடுத்து தவிக்கும் தவிப்பு...! இங்கே வார்த்தைகளாக எழுத முடியாது...!


கையில் மொபைல் போன் இருந்தாலும், முக்கிய எண்களை மனனம் செய்ய வைத்துக்கொள்ளலாம், பர்ஸ்சில் கைகளுக்கு அடக்கமான டைரிகளில்( 5 ரூபாய் விலையில் கிடைக்கிறது) எண்களை எழுதி வைத்துக்கொள்ளலாம்!(இந்த டைரிய தொலைச்சுபுட்டு தேடுர ஆளுங்களுக்கொல்லாம் நான் பொறுப்பு கிடையாது..!).எண்களை (4 +4 +2=10)இலக்க எண்களாக மனனம் செய்துக் கொள்ளலாம்..!இதை போல உங்களுக்கு என்ன செய்தால் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமோ, அப்படி வைத்துக்கொள்ளுங்கள்..!
ஆகவே நான் சொல்ல வரக்கூடிய கருத்து என்னா?மொபைல உள்ள நம்பர மட்டும் நம்பி வெளிய கிளம்பி நடுரோட்டுல நம்பர் தெரியாம நிற்காதிங்க..!‌

போட்டோ கமெண்ட்:

நடுரோட்டுல நிக்கும்போது இப்படியா இருக்கும் முகம்..!


படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

September 23, 2010

இராஜராஜ சோழனும்,மழைநீர் சேகரிப்பும்



இந்தியாவில் கிடைக்கும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு தான் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது என்று ஓர் ஆய்வு சொல்கிறது.எதிர் காலத்தில் நீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் ஏற்படும் என்றும். நீரை சேமித்து பாதுகாக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுத்திருப்பதை நாம் அறிவோம். எனவே இருக்கின்ற நீரை செம்மையாக பயன்படுத்திடவும், பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்திடுவதிலுமே தமிழகத்தின் நீர் மேலாண்மை சார்ந்துள்ளது.



மழைநீர் சேகரிப்புக்கு உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், ஊருணிகள் மற்றும் கோவில் குளங்கள் அனைத்தும் இன்றும் அப்பணியினைச் செவ்வனே செய்தும்,செய்யாமலும் இருக்கிறன...!நகர்ப்புறங்களில் மழைநீர் சேகரிப்பு முயற்சி இராஜஇராஜன் (கி.பி. 10ம் நூற்றாண்டு) காலத்திலேயே தஞ்சையில்தொடங்கப்பட்டது. தஞ்சைப் பெரியகோவில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுமையும் சேமிக்கும் இடமாகச் சிவகங்கை குளத்தை இராஜஇராஜன் அமைத்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. அதற்குப் பின்னர் தஞ்சையை ஆண்டு செல்வப்ப நாயக்கன், செல்வப்பன் ஏரியைப் (சேப்பன வாரி) வெட்டி அதில் தஞ்சை நகரில் பெய்யும் மழை நீரைச் சேகரித்து, வண்டல் கலந்த நீர் தெளிந்த பின்னர், தனிக்குழாய் மூலம் சிவகங்கைக் குளத்தில் சேமிக்கும்படி அமைத்தான். பிறகு நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் நகரில் உள்ள முக்கிய குளங்களுக்கும், கிணறுகளுக்கும், அரண்மனைக்கும் விநியோகம் செய்த தடயங்கள் கிடைத்துள்ளது‌.


பண்டைய தமிழர்கள் நீரை எவ்வாறு சேமித்து பாசனங்களுக்கு பயன்படுத்தியதையும், நீர்மேலாண்மை குறித்த தமிழர்களின் அறிவு, ஆற்றல் இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மழை நீரை சேமிப்பதற்காக குளம், குட்டைகள், ஏரிகள், மடு, கண்மாய் என்று ஏராளமான நீர் நிலைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.இதை கல்வெட்டுகளிலும் குட ஓலைகளிலும், செப்பேடுகளிலும் மூலம் அறியபடுகிறது.

முதலாம் பரமேஸ்வரன், நஞ்சுவர்மன், கரிகால சோழன்,ராஜேந்திர சோழன் உள்ளிட்ட மன்னர்களும் குளங்கள், கிணறுகள், அணைகள் மற்றும் ஏரிகளை உருவாக்கி நீர் மேலாண்மை செய்த வரலாறுகள் பல உண்டு.இவ்வாறு உருவான ஏரிகள்தான் உத்திரமேரூர் ஏரி, பொன்னேரி ஏரி, வீரானம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளாகும்.

பண்டைய தமிழகர்களிடம் இருந்த அறிவு, ஆற்றல் இப்போ எங்க போய் அடமானம் வைச்சொம்முன்னு தெரியல.அவங்க தோண்டிய ஏரி,குளத்த மூடி பிளாட்டு போட்டு வித்து,வீடுக் கட்டிக்கிட்டு,அவங்க கட்டுன கோயில போய் இறைவன "நல்லா இருக்குன்னு" கும்பிட்ட எப்படி நல்லா இருப்போம்..? நீர் ஆதாரம் தான் அடிப்படை,அத காப்பாத்தினா தான் நல்லா இருப்போம்...!



பிரேசில் நாட்டின் திரு. ரோஜர் எல் சாண்டோஸ் அவர்களின் ‘Right Under Our Nose’ குறும்படம்,சில வினாடிகளில் மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை அழகாக சொல்கிறது..!என்னை இந்த பதிவு எழுத தூண்டிய இந்த குறும்படத்திற்கு நன்றி..!





தமிழக கட்டுமான விதிகளின் படி, வீடுகள் கட்டப்படும்போது, தரையில் சிமெண்டால் வீட்டைச் சுற்றித் தளம் அமைப்பது தவறு. ஆனால், சென்னை போன்ற நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில், இந்த விதி சர்வ சாதாரணமாக மீறப்படுகிறது. இதனால், பூமிக்குச் செல்லும் நீர்வரத்து நின்றுபோய், நில நீரளவும் குறைந்து விட்டது. குறைந்த பட்சம் கார் பார்க்கிங் லது மணல் தரைய விட்டு வைக்கலாம்...!


கவனித்துத் தடுக்கவேண்டிய அரசாங்க அதிகாரிகள் சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு, வாய்மூடி மௌனியாய் இருப்பது வேதனை தருகிறது.இதன் அவசியத்தை அதிகாரத்தில் உள்ளவர்களும்,மக்களுமாகிய நாமும் தான் உணரவேண்டும், உணர மட்டுமல்ல‌ கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதும் தேவையாகிறது..!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

September 20, 2010

நீ மட்டும் என்ன ரொம்ப ஓழுங்கா?


"நீ மட்டும் என்ன ரொம்ப ஓழுங்கா?"

என்று உங்களை ஓருவர் கேட்கிறார் என்றால்,நாம என்ன செஞ்சியிருந்த நம்மல பார்த்து கேட்டுயிருப்பார்?ரூம் போடாமலேயே யோசிச்ச தெரிஞ்சிடும்..!நீங்க அவரது செயல்பாடுகளை சுட்டிக்காட்டி,குறைக் கூறியிருக்கீறீர்கள் என்று அர்த்தம்.எப்பொழுதுமே பிறர் தங்களை நோக்கிச் சுட்டுவிரல் காட்டுவதை யாரும் விரும்புவதில்லை.இன்னும் சிலர் இந்த‌ கேள்விய கேட்க‌முடியாம‌?ப‌க்க‌த்துல‌ உள்ள‌வ‌ர்கிட்ட‌ சொல்லிவிட்டு,இல்ல "கிளம்பி வந்தூட்டனுங்க"...ன்னு மனசுக்குள்ளே புலம்பிக்கிட்டு போய்விடுவார்.

ஏன் நாம் சுட்டிக் காட்ட ஆசைப் படுகிறோம்..?என்கிற கேள்விக்கு... "ஏதோ நமக்கு தெரிச்ச‌ நல்லத சொல்லலாமேன்னு..." பதில் வரும்.நீங்க என்ன தான் நல்ல நோக்கத்தோடு சென்னாலூம்,அவை சில நேரங்களில் பலிக்காது இத்தனைக்கும் யாரோ ரோட்டில் நடந்து போரவர்கிட்ட சொல்ல போவதில்லை.(சொன்ன காட்டுன சுட்டுவிரல கையோட எடுத்துக்கிட்டு போற ஆளுளாம் இருக்கான்).நம்முடைய நெருங்கிய சொந்தமோ, நண்பர்களிடத்தில் சொல்லியிருப்போம்..!நம் நோக்கம் வீணடிக்கப்பட்டதற்காகவும் , திசைமாறிப் போனதற்காகவும் நாம் நிச்சயம் வருந்த வேண்டிவரும்.நாம் வார்த்தைக‌ளை வாய்க்குள்ள‌யே விழுங்க‌ வேண்டியிருக்கும்.

நாம‌ சொல்ல‌ வேண்டிய பொறுப்புல‌ இருக்குர‌த‌னால‌ சொல்ல‌ வேண்டிருக்கும் போது, நம்ம என்ன சொல்ல விரும்புறோமோ,அதை பார்முலா பயன்படுத்திச் சொன்ன கேப்பாங்க..!பார்முலாவா எது எதுக்கெல்லாம் க‌ண்டுபிடிப்பிங்க‌டா?

பார்முலா : (கட்டம் கட்டுனா தனியா 2 மார்க் போடுவாங்கன்னு எங்க வாத்தியார் பள்ளிகூடத்துல சொன்னது)

****************************
* முர‌ண்பாடா பேசுற‌து...! *
****************************

"என்ன மச்சான் (நண்பேண்டா) டைலியும் சரக்கு போல..!"சில கணங்கள் அவர் முகத்தை பார்த்துவிட்டு,"வேல டென்சனா இருக்கும்...!என்ன தான் டென்சனா இருந்தாலும் டைலி அது கொஞ்சம் ஓவர் தான்..!" இந்த ரீதில பேசனூம்.இந்த இடத்துல டைலாக் டெலிவரி ரொம்ப முக்கியம்..

"வீட்டையும் கொஞ்சம் கவனிங்க மச்சான்!(சொந்தம்டா) அத்தனை பேருக்கும் உங்கமேல ரொம்ப எதிர்பார்ப்பும்,வருத்தமும் நிறைய இருக்கு?” சிறு கணத்தை முழுங்கிவிட்டு, ”நீங்க என்ன பண்ணுவீங்க? எல்லா தொழிலயும் நஷ்டம் வர தான செய்யுது? குடும்பத்துக்கு குறை வைக்கக் கூடாதுன்னுதான் பார்க்குறீங்க! நீங்களும் வீட்ல இருக்கறவங்களும் மனசுவிட்டுப் பேசினாதானே?” என்கிற‌ ரீதியில்...

இது தான் முரண்பாடா பேசுர பார்முலா? இந்த முரண்பாடு என்னத்த சொல்லுது? "நாணயத்தின் இருபக்கங்களையும் உணர்ந்தது போல இருபுறமும் உணர்ந்துதான் இருக்கிறேன். இருந்தாலும் நான் சொன்னதில் நல்லதை எடுத்துக்கோ" என்கிற இந்த மாதிரியன அணுகுமுறைகள்தான் நம்மை பார்த்து சுட்டுவிர‌லை நீட்டி கேட்காது
"நீ மட்டும் என்ன ரொம்ப ஓழுங்கா?"


போட்டோ கமெண்ட்:

மேலே உள்ள கேள்வி கேட்டா முகத்த பக்கெட் போட்டு மூடிக்கிட்ட சுத்த முடியாது..!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

September 17, 2010

ஆன்லைன் வசதி -‍ அரசு துறைகள்



தமிழக அரசு,ஆன்லைனில் வசதி பெறும் வகையில் இரண்டு சேவைகளை,இரண்டு நாட்களுக்கு முன் ஏற்படுத்தியிருக்கிறது.

அ:

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், "கம்ப்யூட்டர் நெட் ஒர்க்" மூலம் இணைக்கப்பட்டுள்ளதால்,வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதியை துவங்கி இருக்கிறது தமிழக அரசு.
ஆன்லைனில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

ஆ:

ஓட்டுநர் பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை தமிழக போக்குவரத்துத் துறை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

முதல்ல -க்கு வருவோம்,5 கோடி ரூபாய் மதிப்பில் இதை செயல்படுத்திருக்கிறது அரசு.இனி கல்வித் தகுதியை,அவரவர் வீட்டில் இருந்தபடியே இணையதள முகவரியான : www.tnvelaivaaippu.gov.in ஆன்லைனில் பதிவு செய்யலாம்.விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களையும் "ஸ்கேன்' செய்து அனுப்ப வேண்டும்.அப்போது மாணவர்களுக்கு உடனே தற்காலிக எண் தரப்படும்.மாணவர்களின் தகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள எண் (ஐ.டி. எண்) வழங்கப்படும். நேரடியாக அலுவலகத்திற்கு வந்தும் பதிவு செய்யலாம். இதனால் இனி பதிவுமூப்பு பிரச்னையோ, பதிவு எண்ணில் குழப்பமோ, தவறோ வரவாய்ப்பில்லை என்கிறது தமிழக அரசு.பயனாளர்களின் சார்பாக‌ பாராட்டுக்கள்...!

முதல்ல -க்கு வருவோம், http://transport.tn.nic.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பதாரரின் கேட்கப்பட்ட விபரங்களைக் கொடுத்தால்,அடையாள எண்ணோடு (ஐ.டி. எண்) ஒப்புகை சீட்டு(Acknowledgement) வந்துவிடும்.சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் சென்று கட்டணத்தைச் செலுத்தி, கணினி மூலம் நடத்தப்படும் எல்.எல்.ஆர். தேர்வில் வெற்றி பெற்றால்,உடனடியாக ஓட்டுநர் பழகுனர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.தனக்கு விரும்பிய நாளையும்,நேரத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம் என்பது இதன் சிறப்பு அம்சமாக கூறுகிறது அரசு.

ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிவு வந்ததும் 10, பிளஸ்2 மாணவர்களின் கூட்டம் எந்நேரமும் அலைமோதும்.நான் பலமுறை அலுவலகத்தை கடந்து செல்கையில், மாணவிகளோடு "வறுகடலை" வறுத்தப்படி மாணவர்களை...! பார்த்துயிருக்கிறேன்.(இனி அவங்க என்ன செய்வாங்க..?).

ஏனைய நாட்களில் பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் தங்கள் கல்வித் தகுதியை பதிவு மற்றும் பதிவுமூப்பு செய்ய வருவதால்,எந்நேரமும் கூட்டம் அலைமோதும். அதே போன்று எல்.எல்.ஆர். விண்ணப்பத்துக்கு ஒப்புகை அட்டையும் கிடைக்கிறது.விரும்பிய நாளில், விரும்பிய நேரத்தில் தேர்வு செய்துகொள்ளலாம். விண்ணப்பதார‌ருடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம் முதலான விவரங்களை பிழையின்றி பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது.பொதுவாக‌ இந்த வசதிகள் மூலம் ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுவது குறையும்.நான் எல்.எல்.ஆர். எடுக்க கே.கே.நகர்(சென்னை) ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பட்டபாடு எனக்கு தானே தெரியும்..!?

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் அலையாமலாவது இருக்கலாம் அல்லவா?போக்குவரத்து துறையில்,எல்.எல்.ஆர். எடுப்பதற்கே தரகர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு நிற்பவர்களை நான் பார்த்துயிருக்கிறேன்...!இனி இந்த தரகர்கள் சாரி சாரி...(ஓட்டுநர் பயிற்சி பள்ளி (அ) இந்தியன் கமல்'கள்)புண்ணியவான்கள் என்ன செய்வாங்க...?எல்லாத்துக்கும் வழியிருக்கும் பாஸ்...!

அரசின் இன்னும் சில துறைகளில் ஏற்கனவே கணினி மயமாக்கப்பட்டுயிருக்கிறது மின்சார வாரியம்,பத்திரபதிவு அலுவலகம் போன்றவற்றில்...? அந்த அலுவலங்களில் எப்படியொல்லாம் இந்த வசதிகள் பயன்பாட்டில் இருக்கிறது என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றங்கள் தான் காத்திருக்கிறது..!? உதாரணமாக கணினியில் பிரிண்டர் சரி இல்லை,மை தீர்ந்துரிருக்கும்,அந்த இணையதளம் வேலை செய்யாது இப்படியாக இருக்கும் பிரச்சனைகள்...!
இரண்டு நாட்களில் வேலை வாய்ப்பு பதிவு தளம் வேலை செய்யவில்லை...??!!திட்டங்கள் கொண்டு வருவது போல,அதில் கூடுதல் கவனம் செலுத்த அரசு முன்வர வேண்டும்.

இந்தியாவில் ஐ.டி துறையில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஓன்றான,தமிழ் நாட்டில் பொறியியல் மற்றும் இளங்கலை படிப்பின் மூலம் ஆண்டிற்கு லட்சங்களில் மென் பொருள் வல்லுனர்களை உருவாக்கும் இந்த முற்போக்கு மாநிலத்தில் இந்த முறைகள் பல‌ ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும்...!அரசின் தாமதமான முடிவானாலும் வரவேற்க தவற மாட்டோம்.வரவேற்க தயாராயிருக்கின்ற நாங்கள் சில தவறுகளை சுட்டிக் காட்டுவதும் எங்கள் கடமையாகி விடுகிறது...!

போட்டோ கமெண்ட்:எல்.எல்.ஆர். விண்ணப்பிக்க ஆன் லைனில் இடம்பெற்றிருக்கிற விண்ணப்பம்

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

September 14, 2010

இறந்தும் வாழ்கிறார்கள் சிலர்...!


ச‌மீப‌கால‌ங்க‌ளில்,நாளிதழ்களில் வெளியாகிற செய்திகளில் ஓன்று மூளைச்சாவு (பிரெய்ன் டெட்) மற்றும் உடல் உறுப்பு தானம் ப‌ற்றிய‌ச் செய்தி.அதைப் ப‌ற்றி தெரிந்துக் கொள்ள‌ எண்ணி இணையம் மற்றும் நாளிதழ்களில் என‌க்கு கிடைத்த தகவல்கள் உங்க‌ள் பார்வைக்கு ஓர் ப‌திவாக‌.தகவல்கள் தவறாக அர்த்தம் புரித்துக்கொள்ளாமல் இருக்க தகவல்கள் எடுக்கப்பட்ட சில இணைத்தின் எழுத்து நடையிலேயே சில வரிகள் இடம்பெற்றியிருக்கிறது,நடு நடுவே என் எண்ண எழுத்துக்களும் இடம்பெற்றியிருக்கிறது.என்னால் முடிந்த‌ வ‌ரை நீங்க‌ள் ப‌டிப்ப‌த‌ற்கு சுவார‌சிய‌மாக‌ வ‌ழ‌ங்கியிருக்கிறேன்...!


முதலில் மூளைச்சாவு ன்னா என்னான, ஓருவர் விபத்தில் சிக்கி மூளை செயல் இழந்து, உடல் செயலற்றுப்போவதை,டாக்டர்கள் "கோமா" என்கின்றனர்.அந்த‌ "கோமா"வை பல‌ வகையாக பிரிக்கப்படுகிறது.அதில் ஓரு வகை மீண்டு வர முடியாத நிலை தான் மூளைச்சாவு எனப்படுகிறது.இது அடைந்தவரின் இதயம் துடிக்கின்றபோதும்,சொந்தமாக மூச்சுவிட முடியாததால் ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் உதவிக் கொண்டு மூச்சு செலுத்தப்படும்.


மூளைச்சாவை உறுதிசெய்வ‌த‌ற்கு 13 வகையான சோதனைகள் க‌டைபிடிக்க‌ப்ப‌டுகிறது‌.


* ஆறு மணி நேர இடையில் இரு முறை சோதனைகள் நடத்தப்படும்.
* சோதனையின்போது,மூளைச்சாவு அடைந்தவர் உடல்,குளிர்ந்த நிலையிலும்,இரத்த வெளியேறி,உடல் சூடான நிலையிலும் இருக்கக் கூடாதாம்.
* கண்மணியின் அளவு எப்படி உள்ளது;அது சுருங்கி விரிகிறதா? மற்றும் காட்டன் துணியால், கரு விழி அசைகிறதா என தொட்டுப் பார்க்கப்படும்.
* ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் அகற்றிய பிறகு,அவரால் சுயமாக மூச்சு விட முடிகிறதா என்று சோதிக்கப்படும்.
* வாயில் பிளாஸ்க்டிக் டியூப் வைத்து, இருமல் உள்ளதா என்றும், காதுக்குள் சுடுநீர் ஊற்றி கண்ணசைவு உள்ளதா என்றும் சோதிக்கப்படும்.


இந்தச் சோதனைகளை நடத்தி ஒருவர் மூளைச்சாவு அடைந்ததை, அவருக்கு சிசிச்சை அளிக்கும் டாக்டர் முதலில் உறுதி செய்வார். அதன்பிறகு, அம்மருத்துவமனையின் சூப்பிரண்டு உறுதிப்படுத்துவார். தொடர்ந்து, நரம்பியல் நிபுணர்கள் (நியூராலஜிஸ்ட்) அல்லது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் (நியூரோ சர்ஜன்) சோதிப்பர். அவர்களும் உறுதி செய்த பிறகு, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பதிவு பெற்ற டாக்டர் சோதிப்பார். இவ்வாறு நான்கு டாக்டர்கள் சோதனை நடத்திய பிறகே, ஒருவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்படும்.


மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் ஒரு வாரம் வரை துடித்துக்கொண்டே இருக்கும். உடல் உள்ளுறுப்புகளைத் தொடர்ந்து இயங்க வைக்கத் தேவையான சக்தியைக் கொடுக்க, ஊசி மூலம் குளுகோஸ் செலுத்த வேண்டும். இதயத்தை சீராக இயங்க வைக்க டோபோமின், டிரன்லெனின், டோடிடமின், ஹைசோ பெர்னலின், வேசோ பிரசின், டி3 தைராக்சின் உள்ளிட்ட மருந்துகளை உடலினுள் தேவைக்கேற்ப செலுத்த வேண்டும்.


மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து இதயத்தை அகற்றிய பின், அதை நான்கு மணி நேரத்திற்குள்,மற்றவர் உடலில் செலுத்த வேண்டும்.இதயம் மட்டுமின்றி இதய வால்வுகளையும் தேவைப்படும் நபர்களுக்கு பயன்படுத்த முடியும்.கண்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல், எலும்புகள், தோல் ஆகியவற்றையும் மற்றவர்களுக்கு பயன்படுத்தலாம்.



கடந்த ஆண்டில் மூளைச்சாவு ஏற்பட்ட 59 பேர், அவர்களது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்துள்ளனர். அவர்களது உடலில் இருந்து, 118 சிறுநீரகங்கள், 47 கல்லீரல்கள், 15 இருதயங்கள், 84 கண் வழித்திரை படலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல் பாகங்கள், உடல் உறுப்புகளுக்காக காத்திருந்த பலருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இருதய மாற்று ஆபரேசன் சென்னை அரசு பொது மருத்துவமனை உட்பட இரண்டு மருத்துவமனைகளில் செய்யப்படுகின்றன. மற்ற உடல் உறுப்புகள் பெரும்பாலான மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்களால் பொருத்தப்படுகின்றன.இப்படியாக இறத்தும் வாழ்கிறார்கள் சிலர்...!


மூளைச்சாவு ஏற்பட்டவர்களை பராமரிக்க ரூ.5 கோடியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழக அரசு விசேஷ மையத்தை திறந்துள்ளது. மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. தானம் செய்யக்கூடிய உறுப்புகளை பாதுகாக்கத்தான் அரசு அதற்காக தனி பராமரிப்பு மையத்தை உருவாக்கி உள்ளது.


உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது மேலும் விளம்பரங்கள் மூலம் மக்களை சென்றடைய வைக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்.தமிழகத்தில் மூளைச்சாவு ஏற்பட்டவரது உடல் உறுப்புகளை, ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு விரைவாக எடுத்துச் சென்று பொருத்த, தமிழக அரசுக்கு சொந்தமான சிறிய ரக விமானம், ஹெலிகாப்டர் பயன்பாட்டுக்கு வருவ‌தாக‌ செய்தி வ‌ந்த‌து,அது ந‌டைமுறை ப‌ட்ட‌தாக‌ தெரிய‌வில்லை...!ஒருவர் கோமா நிலையில் இருக்கும்போதே பணத்திற்காக, இறந்ததாகக் கூறி அவரின் இதயத்தை வசதி படைத்தவர்களுக்கு விற்கும் வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.இது போன்ற‌ செய‌ல்க‌ள் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தால், ம‌க்க‌ளிட‌த்தில் ஏற்ப‌ட்டுள்ள‌ விழிப்புண‌ர்வு கேள்விகுறியாகிவிடும்,ஆக‌வே அர‌சு இதுபோன்ற‌ த‌வ‌றுக‌ள் ந‌டத்திடா வ‌ண்ண‌ம் தீவிர கண்காணிப்பு மற்றும் க‌டுமையான‌ ச‌ட்ட‌ங்க‌ள் மூல‌ம் நடக்காமல் தடுக்கப்பட‌ வேண்டும்.

போட்டோ கமெண்ட்:
உடல் உறுப்புக்கள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட காரணமாக விளங்கிய இதயேந்திரன்.


படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

September 01, 2010

மனுக்களுக்கு இரசீது தரும் மாவட்டஆட்சியர்:


வேற எங்கையுமில்லை நம்ம தமிழ்நாட்டில் தான்..!காஞ்சிபுரத்தில் ஆட்சியராக பதவி வகிக்கும் "சந்தோஷ் மிஸ்ரா"இதை செயல்படுத்தி வருகிறார்.அவருக்கு மனுக்கள் கொடுத்தால் இரசீது கிடைக்கிறதாம்.மனுக்கள் தொடர்பான நடவடிக்கை எடுக்கபடுகிறதாம்,ரசீதைக் காட்டி "இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை என்ன?என்று வினவலமாம்.


இரசீது இல்லாமல் மனுக்கள் வாங்கப்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை என்று எச்சரித்துள்ளதாக கேள்வி.இதன் மூலம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை ஏற்படுகிறது...!


பொதுவாக நான் கேள்வி பட்டவரை,நமது தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இ.ஆ.ப அதிகாரிகளின் ஈடுபாடு மந்தமாக இருப்பது போல் தோன்றுகிறது,சிலரே தனித்துவத்துடன் செயல்படுத்துகின்றனர்.உதாரணமாக இறையன்பு,உமாசங்கர்,இராதகிருஷ்ணண் இப்படியாக உள்ளது.ஆனால் வேற்று மாநிலத்தில் இருந்து உயர் பொறுப்புக்கு வரும் அதிகாரிகள் தைரியமாக செயல்படுவது போல தெரிகிறது.சில ஆட்சியர்களின் நிலை இன்று வருந்ததக்கதாய் இருக்கிறது,ஆட்சியாளார்களுக்கு ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் உதைபந்தாக தெரிவது பரிதாபமாகயுள்ளது...!


மனுக்களுக்கான இரசீது முறை மூலம் ஒருவிதத் தார்மீகப் பொறுப்பையும் சந்தோஷ் மிஸ்ரா பெற்றுள்ளார் என்றே நாம் நம்ப வேண்டியுள்ளது.ரசீதுக் கொடுப்பதற்கு அதிகாரிகள் அரசியல் மற்றும் எந்த ஓரு நிர்பந்தங்களுக்கும் உட்பட தேவையில்லை.இந்த மாதிரியான செயல்கள் மக்களுக்கும் அதிகாரிக்கும் உள்ளே இடைவெளியை குறைக்கும் என்பதில் சிறிது அளவும் சந்தேகமில்லை.இது போல சின்ன சின்ன மாற்றங்களை ஆட்சியர் மற்றும் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் கொண்டு வரலாம்.

ஆட்சியர் பணி என்பது நாட்டின் முக்கியமான பதவி ஆகும்.அதை கெளரவ பணியாக கருதாமல்,நிறைய மாற்றங்களை செய்து,நற்காரியங்கள் செய்ய வாய்ப்பு இருக்கிறது.புதியதாக ஓரு வேலை செய்யும்போது,மனதுக்குள் ஓர் வேகம் இருக்கும் இது மனித இயல்பு.புதிதாக பொறுப்புக்கு வரும் உயர் அதிகாரிகள் சட்டங்களை பயன்படுத்தி,புதிய செயல்களை,திட்டங்களை வெளிக்கொண்டு வரலாம்.சிறிய செயல்கள் நாளை ஓர் பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும்...!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

August 28, 2010

நீதித்துறை - மக்களின் கடைசி நம்பிக்கை




செய்தி: சட்டத்துறை தொடர்பான தேர்வில் காப்பி அடித்த 5 நீதிபதிகள் கையும், களவுமாக பிடிபபட்டனர். தொடர்ந்து 5 பேரையும் சஸ்பெண்ட் செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்தியாவில், நீதித்துறை எப்படி செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு,இது ஆந்திராவில் நடந்த சம்பவம்.எனது நண்பர் ஓருவர் வாயிலாக கேட்டுயிருக்கிறேன்,ஓரு பேப்பர் ஓன்றுக்கு இந்த விலை?(பல ஆயிரங்களில்)என்ற அடிப்படையில் விலை நிர்ணயக்கப்படுமாம்.பல ஆயிரங்களை செலவு செய்து,தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார்களாம்.சட்ட கல்லூரி மாணவர்கள் ஏதோ காரணங்களை காட்டி ஸ்ரைக் செய்து கல்லூரியும் போக மாட்டார்கள்,தேர்வையும் காப்பி அடித்தோ(அ)பேப்பருக்கு காசு கொடுத்தோ பாஸ் செய்துவிடுவார்கள்.வெற்றி பெற்று,சட்டத்துறையில் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். இந்த வழியில் வந்த வக்கீல் மற்றும் நீதிபதிகள் அவர்களால் மட்டும் எப்படி காப்பி அடிக்காமல் தேர்வு எழுத முடியும்.
எதிர்காலத்தில் இவர்கள் தான் வக்கீல்களாகவும்,நீதிபதியாகவும் வந்து, பின்னாளில் நமக்கு நீதியை போதித்து நீதியை காப்பாற்றுபவர்கள்...!


இந்திய நீதித்துறை,நெறிமுறை இல்லாத, ஒழுக்க கேடான ஆட்களை கொண்டு இயங்கி வருகிறது. ஊழல், லஞ்சம், போன்றவை நீதிமன்றகளில் பாசிகளாய் படிந்துகிடக்கிறது.சட்டம் படித்து சட்டத்தையே மதிக்காதது,உண்மையை பொய்யாக்குவது என்றே வித‌த்தில் மட்டுமே செயல்படுகிறது.


நம்மில் சில பேர் ஏதேனும் வழக்குகளில் சிக்கி, சிக்க வைக்கப்பட்டு நீதிமன்றங்களில் வருடக்கணக்கில் வாழக்கையின் பொன்னான நேரத்தை தொலைத்து, லட்சகணக்கில் பணத்தை வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் அழுது கொண்டு, மனநிம்மதியின்றி நீதிமன்ற‌ வாசல்களில் அலைந்து கொண்டு இருகிறார்கள். என்னை பொறுத்த வரையில், இவர்களிடம் வழக்கை கொண்டு செல்வதற்கு பதிலாக கிரிமினல் வழக்கை தவிர்த்து சிவில் வழக்குகளை பாதிக்கபட்டவர்களே பேசி தீர்த்துக்கொள்ளலாம் எந்த கர்வமும் இன்றி.


பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கமுடியாத பிரச்சனை உலகில் ஓன்றுமில்லை. வக்கீல்கள் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது.திறமையான வக்கீல்கள் சிலர் கட்சிகாரர்களின் பணவனப்பை பொறுத்தே வழக்கை எடுத்துக் கொள்கிறார்கள்.வழக்குகாக பணபலத்தைக் கொண்டு எதிர்கட்சிகாரர்களின் வக்கீல்களை வாங்கி கொள்ளும் அவல நிலையும் இருக்கிறது. நாடு நாசமா போறதுக்கு இந்த மாதிரி சிந்தனையுடைய‌ நீதிபதிகளும்,வக்கீல்களும், காவல் துறையும் முக்கிய காரணம்.



நீதித்துறையை முழுவது குறை கூறிவிடவும் முடியாது.சில அதிரடியான நல்ல தீர்ப்புக்க்ளையும் கூறியிருக்கிறது.அரசியல்வாதிகளை அதிர வைத்த அறிக்கைகள் வந்துயிருக்கிறது.நேர்மையான‌ நீதிபதிகளும் சில பேர் இருப்பதனால் தான்,இன்றும் சில நியாயங்கள் பிழைத்துக்கொண்டிருக்கிறது.


நீதித்துறை, தன்னை முழுமையாக சுயபரிசோதனை செய்துகொள்ள தயாராக வேண்டும். நாடு முழுவதும் லஞ்ச லாவண்யத்தில் ஊறிக் கொண்டு,தவறு செய்கின்ற‌ நீதிபதிகளை கண்டுபிடித்து,களையெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கையையும் காப்பாற்ற அரசாங்கம் முன்வரவேண்டும்...!


படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

August 24, 2010

சென்னையும், அதன் தேவையும்


உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்றான,சென்னை தமிழகத்தின் தலைநகர் மற்றும் இந்தியாவின் நான்கு பெரு நகரங்களில் ஒன்றாக‌ திகழ்கிற சென்னை உதயமாகி நேற்றோடு 371 ஆண்டுகளாகிய நிலையில்.நம் கண்முண்ணே உள்ள பிரச்சினைகள்:
* மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் குடிநீர்.
* அதிக மக்கள் தொகை அடர்த்தி.
* குடிநீர் பற்றாக்குறை.
* வாகன நெரிசல்.
* சாலைகள் பராமரிக்கப்படாமை.
சென்னை முறையாக திட்டமிட்டு உருவாக்கிய நகரம் அல்ல,சுகாதாரக்கேட்டுக்கும்,போக்குவரத்து நெரிசலும் இதுவே காரணம்.ஏரி மற்றும் வாய்க்கால்கள் அழிக்கப்படுவதால்,குடிநீர் பஞ்சத்தையும்,கடும் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் அப்பகுதியே மிதக்கும் நிலையும் உருவாகிறது.புறகர் பகுதிகள் இஷ்டத்துக்கு அடுக்குமாடி குடியிருப்புகளாக எழுந்து நிற்கிறது.அடிப்படை வசதிகளில் உரிய கவனம் செலுத்தப்பட வில்லை.

பல்கிப் பெருகி வரும் சென்னை மாநகரின் நெரிசலைத் தவிர்க்கவும்,மக்கள் சென்னை நகரின் வசதிகளை வெளியிலும் அனுபவிக்கும் வகையில், சென்னைக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகளை இணைத்து மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்கும் திட்டம் வரையறுக்கப்பட்டு,அதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

மாநகரில் தொடர்ந்து சாலைகள் போடுவதால் சாலைகள் உயர்வதை தடுக்கும் வகையில், புதிய நடை முறையில் (“கோல்டு மில்லிங்”) ஒரே நேரத்தில் 1.30 மீட்டர் அகலத்திற்கு சமமாக சாலையை அகழ்ந்தெடுத்து தார் சாலை அமைக்கப்படுகிறது. புதிய மேம்பாலங்கள் போடப்படுகிறது(இது சரியான தீர்வா?).கட்டப்பட்ட சில மேம்பாலங்களால் பயன் உள்ளதாகவே தெரிகிறது.(மேம்பாலங்கலால் பெரிய சாலைகள் குருகிய சாலைகளாக காட்சி அளிப்பது வேறு).போக்குவரத்து விதிகளை கடுமையாக ஆக்கப் பட்டு,இடையுறாக சாலையிலேயே வியாபாரம் நடக்கிறது.அதை சரி செய்ய முயல வேண்டும்.

பூங்காக்கள் பல நிறுவப்பட்டு,பளிச்சென்று இவை காணப்படுகின்றன. பலரும் வாக்கிங் போக இவற்றை பயன்படுத்துகிறார்கள்.நல்ல விஷயம்.

செம்மொழி மாநாட்டின் பயனாக,மாநகரில் அழகு தமிழில் பெயர் பலகைகள் நம்மை பார்த்துக் கண் சிமிட்டுகிறது.இந்த மாநாடு தேவையா? இல்லையா? என்று மற்றொரு பதிவில் விவாதித்துக்கொள்ளலாம்.

மாநகராட்சி ஓரளவு சிறப்பாக நடைபெறுவது போல தெரிகிறது,மாநகர தந்தை "Zee Tamil" தொலைக்காட்சியில் வந்து, மக்களோடு நேரடியாக பேசுவது ஆறுதலான விசயம்.
சமீபத்தில் வெளியான‌ "மதராசபட்டிணம்” திரைப்படத்தில் கூவம் ஆற்றில் மக்கள் படகில் செல்வது போல் காண்பிக்கப்படுகிறது,அதை பார்த்த சென்னையை அறிந்த உள்ளங்கள் இப்போது அப்படியிருந்தால் எப்படியிருக்கும் என்று ஏக்கமாக பார்த்தவர்கள் ஏராளம்...!கூவம் நதியில் பல்வேறுப்பட்ட கழிவுகள் கலப்பதால்தான் கூவம் சாக்கடையாக காட்சியளிக்கிறது.

கூவத்தினால் நாமுடைய சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.இது சாக்கடையாக மாறி நதி ஓட்டம் இல்லாததனால்,பெரும் வெள்ளம் வரும் காலத்தில் சரியான வடிகாலாக இல்லாத நிலையும் மற்றும் கொசு உற்பத்தியாகி மக்களை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

கடந்த 40, 50 வருடங்களாக அரசு 3 திட்டங்களைத் தீட்டி அதில் முழுவதுமாக தோல்வியைக் கண்டிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.இந்த‌ தோல்வி எத‌னால்?ஏற்ப‌ட்ட‌து என‌ ஆராய்ந்து,அதை க‌ளைந்து அர‌சு "கூவத்தை அழகுபடுத்துதல்" தீட்ட‌த்தை வெற்றி பெற‌ச் செய்தால் ந‌ன்றாக‌ இருக்கும்.

அரசும்,மாநகரை அழகுபடுத்துதல் மட்டுமின்றி,ஆக்கபூர்வமான திட்டங்கள் தீட்டவேண்டும் மற்றும் தினமும் பல ஆயிரம் பேர் குடியேறும் மாநகர வளர்ச்சி மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்திடல் வேண்டும். இதற்கெல்லாம் தீர்வு....?அரசினின் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் மக்களாகிய நாமும்.

நம் நகரை சுத்தமாக வைத்து கொள்வதில் நமக்கும் பங்கு உண்டு என்பதை மறக்க கூடாது.நம்முடைய கடமையும் முக்கியம்.வெறுமனே குற்றம் கூறுவது அழகல்ல.நாம் முன்னோடியாக இருந்து செயல் பட வேண்டும்.உரிய திட்டமிடல் நமது முக்கிய தேவை.அதை பின்பற்றுதல் அதனினும் முக்கிய தேவை.இத்தனை நிறைய‌ குறைகளோடு,சென்னையில் வசிக்கும் மக்களில் நானும் ஓருவன்...!!!

போட்டோ கமெண்ட்:
சென்னை மாநகராட்சி கட்டிடம்(ரிப்பன் பில்டிங்)

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

August 20, 2010

இன்றைய எம்.ஜி.ஆர்.?


து தனிமனித வ‌ழிபாடு,தாக்குதல் பற்றிய பதிவல்ல...!

எம்.ஜி.ஆரின் புகழ்,வசீகரம்,வெற்றிக்கு அடிப்படையாகவும்,இன்றைய எம்.ஜி.ஆராக உருவாக என்னென்ன தகுதிகள் வேண்டும்? எண்ணியதன் விளைவு...இந்த பதிவு..!
"ஓருவன் எந்த செயலைத் தொடங்கினாலும்,அதனால் அழிவதையும்,அழிந்த பின் ஆவதையும் பின்பு உண்டாகும் ஆதாயத்தையும், அறிந்து செய்ய வேண்டும்" என்றதை பயன்படுத்தியவராக எம்.ஜி.ஆர் தெரிகிறார்.
மக்களால், வெவ்வேறு முறைகளில் நம்பிக்கை ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. சிலர் இறைவனிடம் வைத்திருக்கும் நம்பிக்கை அல்லது ஏதாவது பிரபஞ்ச சக்தி என்றும் அல்லது ஓரு பிரத்தியோகமான காப்பாற்றுபவர் அல்லது மதக்கோட்பாடு அல்லாத ஓருவர், அவரது உயர்ந்த, சொந்தத் தனித்தன்மையில் நம்பிக்கை வைத்தல் அப்படியாக உயர்ந்த செல்வாக்கை ஏற்படுத்த சினிமா பிம்பத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றவராக எம்.ஜி.ஆர்.
அறியாமையில் உழலுபவர்கள் நம்பிக்கையில்லாதவர்கள், அறியாமை ஓர் விதத்தில் கல்வி கற்காமை போன்று பொருளாதாரத்தை சார்ந்தாகவும் இருக்குமோ? என்று கருதுகிறேன்.அறியாமையை நம்பிக்கையாக மாற்றக்கூடிய சக்தி எம்.ஜி.ஆரிடம் இருந்திருக்க வேண்டும்."நம்பிக்கை","விசுவாசம்" என்ற இரண்டு பிரிக்க முடியா முகங்களை பற்றிய புரிதல் அவருக்கு இருந்திருக்க வேண்டும்.
நம்பிக்கையை தொழில்(சினிமா) சாராத மக்களிடத்திலும், விசுவாசத்தை தொழில் சார்ந்த மக்களிடத்திலும் ஏற்படுத்திருக்க வேண்டும். இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து பொருளாதார துணையோடு ஓர் வசீகரத்தை உருவாகிருக்கவேண்டும்.நம்பிக்கையும்,விசுவாசமும் கைகோர்த்து சுமுகமான மனித உறவிற்கும், ஓர் இணக்கமான சமூக செயல் திறனுக்கு அடிப்படையாக மாறியிருக்க வேண்டும்.
சினிமா வெளிச்சமும், பத்திரிக்கை ஊடகமும், செவி வழி கதை சொல்லிகளும்(ஊருக்கு நாலு பேர் அருமை,பெருமைகளை, தங்கள் கற்பனைகளோடு எடுத்துச் சொல்லி ஆலமரத்தடிகளிலும், திண்ணையிலும் பேசியவர்கள்). எதிர்மறை செய்தி வராமல் பார்த்துக் கொள்ள விசுவாசிகளும், பொருளாதாரமும் கை கொடுத்திருக்க வேண்டும்.இது தான் அர‌சிய‌லில் வெற்றிக் கொடியை ப‌ற‌க்க‌விட்டிருக்கும்.என் பார்வையில் ந‌ம்பிக்கையை ஏற்ப‌டுத்தி,விசுவாச‌த்தை உருவாக்கி வெற்றி பெற்ற‌வ‌ராக‌ எம்.ஜி.ஆர்.
இன்றைய காலகட்டத்தில்,பொருளாதாரத்தை கொண்டு "நம்பிக்கை","விசுவாசத்தை" உருவாக்குவது எளிதான காரியமல்ல.ஓவ்வொரு செயலிலும் பொருளாதாரத்தை ஓட்டிய‌ சிந்தனையில் இன்றைய மக்கள்.சினிமா ரசிகனும் சினிமா பார்த்துவிட்டு கைதட்டிவிட்டு போய்விடுவான்.அறிந்தும்,அறியாமையில் இருப்பது போல மக்கள் மனநிலை என்பது தான் நிதர்சனமான உண்மை.சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று,இன்றைய எம்.ஜி.ஆராக‌ உருவாவது....?


போட்டோ கமெண்ட்:
சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

August 18, 2010

சரி செய்யுமா இரயில்வே நிர்வாகம்?


தமிழகத்தில்,சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் இரண்டு வகையான பயணம் வசதி இருக்கிறது. ஓன்று முதல்வகுப்பு பயணம் மற்றொன்று இரண்டாம்வகுப்பு பயணம்.பிளாட்பார கவுண்டரில் நாம் பயணம் செய்ய வாங்கினால் இரண்டாம் வகுப்பு டிக்கெட்களே தரப்படுக்கிறது. முதல் வகுப்பு டிக்கெட்டுக்கும் இரண்டாம் வகுப்புக்கு டிக்கெட்டுக்கும் விலையில் இரண்டு மடங்கு வித்தியாசம் இருக்கும்.பெரும்பாலும் சீசன் டிக்கெட் எடுப்பவர்கள் கூட்டத்திற்கு பயந்து முதல்வகுப்பு சீசன் டிக்கெட் எடுத்துவிடுபவர்கள் உண்டு.

இது சொல்ல வந்த மேட்டர் இல்ல....ஊரில் இருந்து அதாவது மற்ற மாவட்டங்களில் இருந்து(மின்சார ரயிலை பயன்படுத்தாதவர்கள்) வருபவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால், அவர்களுக்கு இரண்டு வகையான டிக்கெட் விபரம் தெரித்திருக்க வாய்ப்பில்லை.டிக்கெட் கவுண்டரில் வாங்கிய இரண்டாம்வகுப்பு டிக்கெட் கையில் வைத்திருப்பார்கள், ரயில் வந்தவுடன் ஏதோ பெட்டியில் ஏறிவிடுவார்கள்.ஏறிய பெட்டி முதல்வகுப்பாயிருந்தால் அடுத்த ரயில்நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பிடித்து,இறக்கி பைன் கட்டச் சொல்லுவார்கள்.மின்சார ரயிலை அதிகம் பயன்படுத்தியவர்களுக்கு தெரியும்,ரயில்நிலைய பரிசோகர் அறையில் இருந்து பரிசோகர் பார்த்துவிட்டு"மானை பிடிக்க பாய்கிற புலியை" போல பாய்வார்கள்.நீங்கள் ரயில்நிலையத்தில் கவனித்தீர்கள்ளானால்,பரிசோதகர் அறையில் பைன் கட்ட சொல்லி வாக்குவாதம் நடந்துக்கொண்டிருக்கும்,பிடிப்பட்ட நபர்களை பார்த்தால் தெரியும் கண்டிப்பாக மின்சார ரயிலை அதிகம் பயன்படுத்தாதவர்கள் இருப்பார்கள்.
ஏன் அவர்கள் மட்டும் இப்படி தவறுதலாக ஏறி மாட்டிக்கொள்கிறார்கள்? என்று நான் யோசித்தப்போது, ரயில்வே நிர்வாகம் விளக்கமான விளம்பரப்பலகைகள் வைப்பதில்லை. ரயிலில் பெட்டிகளில் இரண்டாம்வகுப்பு பெட்டிக்கும்,முதல் வகுப்பு பெட்டிக்கும் வர்ணத்தால் வித்தியாசப்படுத்தி இருப்பார்கள்.அந்த வித்தியாசம் பெரிதாக பெட்டிகளை வேறுபடுத்தி காட்டுவதில்லை. அதிகம் பேருந்தை பயன்படுத்தியவர்களுக்கு இந்த வேறுபாடு புரிவதில்லை.
இரயில்வே நிர்வாகம் முதலில் கண்ணில்படுகிறபடி விளம்பரபலகைகள் வைக்கவேண்டும். மற்றும் இப்படியாக மாட்டிக்கொள்ளும் அப்பாவிகளை விளக்கம் சொல்லி எச்சரித்து அனுப்பலாம்.(அவர்கள் தெரிந்து ஏறியிருக்க வாய்ப்பில்லை).இதை சரி செய்யுமா ரயில்வே நிர்வாகம்?ரயில்வே பற்றி நிறைய எழுதலாம்...இப்பொ இதுமட்டும்....

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

August 16, 2010

காப்பி குடிக்கலாம் வாங்க‌


நாம் அன்றாடம் பயன்படுத்தும் விசயங்களை நாம் கூர்ந்து கவனிப்பதில்லை.சில விசயங்களை கவனிக்கும்போது ஆச்சரியப்படுத்தும் செய்திகள் நமக்கு கிடைக்கும்.சிலருக்கு காலையில் எழுந்தவுடன், காப்பி இல்லையேன்றால் வேலையே ஓடாது."ஸ்ராங்க காப்பி குடிச்சா தான் தலைவலி விடும்" என்ற நம்பிக்கை கொண்டவர்களை நான் பார்த்துயிருக்கிறேன். காப்பியைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டு இணையத்தில் தேட ஆரம்பிக்க கிடைத்தது ஓர் பதிவு.(200 மில்லி லிட்டர்) காப்பி குடித்தாலே அதில் 80-140 மில்லி கிராம் வரை காஃவீன் என்னும் போதைப் பொருள் இருக்கிறது என்று நாம் அறிந்ததே.

ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள். ஆடுகள் காப்பிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்ததெனக் கண்டு தாங்களும் அவ்வாறே உண்டு காப்பியின் சிறப்பான உணர்வூட்டும் தன்மையை உணர்ந்தனர். இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றார்கள்.எத்தியோப்பியாவில் இருந்து இக்கண்டுபிடிப்பு எகிப்துக்கும் ஏமன் நாட்டிற்கும் பரவியது. அதன் பின்னர் ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டளவில் பெர்சியா, துருக்கி, மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கும் பரவியது.
காப்பி உலகில் மிகவும் அதிகமாக பருகுகும் நீர்ம உணவுகளில் ஒன்றாகும். 1998-2000 ஆண்டுகளில் உலகில் ஆண்டொன்றுக்கு 6.7 மில்லியன் டன் காப்பி விளைவிக்கிறார்கள். இது 2010ல் 7 மில்லியனாக உயரும் என்று கருதுகிறார்கள்.
உலகிலேயே அதிகமாக விற்று-வாங்கக்கூடிய, நிலத்தின் விளைபொருளாக உள்ளவற்றுள், பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பொருள் காப்பிதான். மொத்தமாக கடைவிலை மதிப்பில் (retail value) ஆண்டுக்கு 70 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். காப்பி, உலகில் 50 க்கும் அதிகமான நாடுகளில் சற்றேறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேர்களில் பயிரிடப்படுகின்றது. இன்று ஏறத்தாழ 100 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஊதியம் காப்பிப் பயிரை ஒட்டி நடக்கின்றது.

காப்பி விளைச்சலில் முதல் பத்து இடங்களை வகிக்கும் நாடுகள் 2005ம் படி எடுத்த கணக்கின்படி நாம் 6 வது இடத்தில் இருக்கிறோம்.இன்னும் நிறைய மேட்டர் இருக்கு....பதிவு பெரிசா போகும்...அதான்...ஓகே..ஓர் கப் காப்பி குடிக்கலாம் வாங்க...!

போட்டோ கமெண்ட்:

3D-Art Effectல்
காப்பியுடன் கப்
படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

August 12, 2010

108 அவசர சிகிச்சை சேவையிலும் லஞ்சம்


தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் அவசர உதவி சேவை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளை, நோயாளிகளின் விருப்பமின்றி கட்டாயமாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து லஞ்சம் பெற்றுக் கொள்வதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதாகவும். தவறு செய்த ஒன்பது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு, நான்கு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது.மேலும் 108 ஊழியர்கள் பணம் கேட்டாலோ, லஞ்சம் பெற்றிருந்தாலோ 108 இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை இப்பொழுது தான் ஆரம்பித்துள்ளது.இப்பொழுதோ இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.வளரவிட்டால் எதிர்க்காலத்தில் நமக்கு ஆபத்து.இது போன்ற சமயத்தில் லஞ்சம் கேட்டால்,நாம் இருக்கும் அவசரத்தில் கொடுத்துவிடுவோம்.இதுபோன்றோர்களிடம் உரக்க கத்திக் கேளுங்கள்."எதற்கு தர வேண்டும் பணம்?" என்று..!
புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கவாபோகிறார்கள்? என்று விட்டுவிட வேண்டாம்.நமது எதிப்பை பதிவு செய்துவிடுங்கள்.என்ன ஒரு அரக்கக் குணம் பாருங்கள் ! அல்லாடிக் கொண்டிருக்கும் ஒரு உயிரையோ, உற்றாரையோ பற்றிச் சற்றும் கவலையின்றி, என்ன அரக்கத்தனம். யார் எப்படி?என்ன? ஆனால் என்ன பணத்தைப் பிடுங்கித் தன் வயிறை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
இதே நிலைதான் பிணகிடங்கு வேன் ஊழியர்களிடமும் ! பிணத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசும் பல ஜாதிக் கழிசடைகள் !அவர்கள் குடும்பத்தருக்கு அவசர உதவி தேவை படும் போது இவர்களின் சக உழியர்கள் இவர்களிடமே லஞ்சம் கொடுக்கும் போது தான் இவர்களுக்கு புரியுமோ?..

எனது இரண்டவது பதிவு இது...! படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

நமது பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை :


தொடர்ச்சியாக 23 மணிநேரம் இன்டர் நெட்டில் வெப்சைட் பார்ப்பவரா .. எங்களுக்கு எல்லாம் வெற வேலையே இல்லையா? என்று கோபப்படக்கூடாது.அப்படி பார்த்துக்கிட்டு, படிச்சிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு தான் கீழே உள்ள மேட்டர்...அப்படி மொய்பவர்களுக்கு இருதயம் சம்மந்தமான நோய் வரும் என அமெரிக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என நாளிதழ் ஓன்றில் செய்தி வந்துள்ளது.
அமெரிக்காவின் டெய்லி மெயில் எனும் மருத்து இதழின் ஆசிரியர் டேவிட் டஸ்டன் கூறுகையில்... நாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டரில் பணி செய்வதன் காரணமாக நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இணையதளத்தில் முழ்கிவிடுவோம் அவ்வாறு நாள் ஒன்றுக்கு 23 மணிநேரமும் சைட் பார்ப்பவர்களுக்கு 65 சதவீத இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இது சாதாரணமாக 11 மணிநேரம் சைட் பார்ப்பவர்களைவிட அதிகம் ஏற்படும் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக நாம் நடக்கும் போது, நிற்கும் போது கால்களில் தசைகளில் வேலை செய்கின்றன. இதன் மூலம் உடலில் நம் இதயத்தில் செல்லக்கூடிய ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு சீராக உள்ளது. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் போது தான் உடல் ஆக்கச்சிதைவு ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் இருதயம் பலவீனமடைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது போன்று ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பதும் அதற்கு காரணமாகும். ஆகவே சிறிது நேரம் எழுந்து நிற்பது தான் சிறந்தது எனவும் அறிவுறுத்துகின்றனர்.பெண்களில் ஆறு மணிநேரத்திற்கு மேல் பணியாற்றினால் 37 சதவீதமும், ஆண்களுக்கு 18 சதவீதமும் அதிகரிக்கும் என அமெரிக்காவின் மயோ மருத்துவமனையின் மருத்து பேராசிரியர் ஜேம்ஸ் லேவின் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதை படிக்கும் போது "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நச்சு" என தோன்றுகிறது.இப்போதொல்லாம் பத்திரிக்கை,தொலைக்காட்சி போன்றவற்றில் இதை செய்யாதால் அது வரும்,அதை செய்தால் இது வரும் என்றெல்லாம் வருகிறது.இது போன்று செய்திகளை படிக்கும் போது எனக்கு மனதில் தோன்றும் எண்ணம், இதையொல்லாம் யார் யார் கடைபிடிப்பார்கள் என்று....அந்த செய்தியை படித்தவர்கள் எல்லோருமா? இல்லை படித்துவிட்டு அடுத்தவர்களுக்கு அட்வைஸ் பண்ணவா? நான் எந்த ரகம் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை என நினைக்கிறேன்...

போட்டோ கமெண்ட்:
அந்த அம்மணிய எத காட்டி,சொல்லி சிரிக்க வச்சியிருப்பான்...! அது அவர் அவர் எண்ணத்தை பொறுத்தது....!

எனது முதல் பதிவு இது...! படிச்சிட்டு ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!